Published : 12 Nov 2020 03:14 AM
Last Updated : 12 Nov 2020 03:14 AM
பிஹார் சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவை வெற்றி பெறச் செய்த தொண்டர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்றுமீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளது. இதைத் தொடர்ந்து தேர்தலில் கடுமையாக உழைத்த பாஜக தொண்டர்களுக்கு மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நேற்று அவர் கூறும்போது, “பிஹார் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரித்த மக்களுக்கு நன்றி சொல்ல மட்டும் நான் வரவில்லை. ஜனநாயகக் கடமையில் பங்காற்றிய அனைவருக்கும் நன்றி சொல்ல இங்கு கடமைப்பட்டுள்ளேன். இந்தியாவுக்கு இணையாக உலகின் வேறு எந்த நாட்டிலும்சிறந்த முறையில் தேர்தலைநடத்த முடியாது. வேறு எந்த ஒரு நாடும் இந்த அளவிற்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டிருக்குமா என்றும் தெரியவில்லை.
பிஹார் சட்டப் பேரவை தேர்தலில் மட்டுமல்லாமல் மத்தியபிரதேசம், குஜராத், தெலங்கானா இடைத்தேர்தல்களிலும் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. இதற்காக உழைத்த கட்சித் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து இடங்களிலும் பாஜகவெற்றி பெற்றுள்ளது. நாட்டுமக்களுடன் தேசிய இணைப்பில்இருக்கும் ஒரே உண்மையான கட்சி பாஜகதான். 2 எம்.பி.க்கள்,2 அறைகள் என்று இருந்த பாஜகஇன்று இந்தியாவின் அனைத்துமூலை, முடுக்குகளிலும் பரவி யுள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT