Published : 10 Nov 2020 03:11 AM
Last Updated : 10 Nov 2020 03:11 AM

புதிய உச்சத்தில் இந்திய பங்குச்சந்தை

இந்திய பங்குச் சந்தைகள் நேற்று புதிய உச்சத்தை எட்டின. சென்செக்ஸ் 704 புள்ளிகள் உயர்ந்து 42,597 என்ற நிலையில் வர்த்தகமானது. நிஃப்டி 197 புள்ளிகள் உயர்ந்து 12,461 என்ற நிலையில் வர்த்தகமானது.

வங்கி மற்றும் நிதித்துறை சார்ந்த பங்குகள் தொடர் ஏற்றத்தில் இருந்து வருவதால் இந்திய பங்குசந்தைகள் தொடர்ந்து 6-வது நாளாக ஏற்றத்தை கண்டுள்ளன.

சென்செக்ஸ் 1.68 சதவீதமும் நிஃப்டி 1.62 சதவீதமும் ஏற்றம் கண்டுள்ளன. 30 பங்குகள் கொண்ட சென்செக்ஸ் குறியீட்டில் இண்டஸ்இந்த் வங்கி, பார்தி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் டெக் மஹிந்திரா ஆகிய பங்குகள் 4.95 சதவீதம் வரை ஏற்றம் கண்டுள்ளன.

நிஃப்டி குறியீட்டில் நிஃப்டி தனியார் வங்கி, நிதி சேவைகள் மற்றும் வங்கித் துறை ஆகியவற்றின குறியீடுகள் 3.28 சதவீதம் வரை ஏற்றம் கண்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x