Published : 10 Nov 2020 03:11 AM
Last Updated : 10 Nov 2020 03:11 AM
தமிழகம் முழுவதும் கல்லூரிகளை திறப்பதுகுறித்து வரும் 12-ம் தேதி முடிவெடுக்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார்.
கரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. தற்போது பாதிப்பு குறைந்து வருவதால்நவ.16 முதல் பள்ளிகள், கல்லூரிகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஆனால், கரோனா 2-வது அலை வரும் அபாயம் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம்வெளியிட்ட எச்சரிக்கையைத் தொடர்ந்தும், மழைக் காலத்தை கருத்தில் கொண்டும் பள்ளி,கல்லூரிகளை திறக்க பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இதைத் தொடர்ந்து, 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு நவ.16 முதல் பள்ளிகளை திறப்பது குறித்து,தமிழகம் முழுவதும் பள்ளிகளில் மாணவர்களின் பெற்றோரை வரவழைத்து எழுத்துப்பூர்வமாக கருத்துகள் கேட்கப்பட்டன.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசும்போது, ‘‘நவ.16 முதல் கல்லூரிகளைத் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. எனினும் கல்லூரிகள் திறப்பு குறித்துபல்வேறு தரப்பினரிடம் இருந்தும் ஆலோசனைகளைப் பெற்று விவாதித்து வருகிறோம். நவ.16-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படுமா என்பது குறித்த இறுதி முடிவு வரும் 12-ம் தேதி எடுக்கப்படும்'' என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT