Published : 10 Nov 2020 03:11 AM
Last Updated : 10 Nov 2020 03:11 AM

தமிழகத்தில் புதிதாக 2,257 பேருக்கு கரோனா முதியவர்கள் உட்பட 18 பேர் உயிரிழப்பு

சென்னை

தமிழகத்தில் புதிதாக 2,257 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். முதியவர்கள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் நேற்றுஆண்கள் 1,380, பெண்கள் 877 என மொத்தம் 2,257 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 585 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 46,079 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை சென்னையில் 1 லட்சத்து 95,880பேர் உட்பட தமிழகம் முழுவதும் 7 லட்சத்து15,892 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் 589 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 2,308 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றனர். சென்னையில் 5,813 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 18,825 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் முதியோர்உட்பட 12 பேர், தனியார் மருத்துவமனைகளில் 6 பேர் என நேற்று 18 பேர் உயிரிழந்தனர். அதிகபட்சமாக சென்னையில் 10 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,362 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 3,726 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 2 லட்சத்து 5,419, கோவையில் 45,287, செங்கல்பட்டில் 44,999, திருவள்ளூரில் 39,030 என்ற எண்ணிக்கையில் பாதிப்பு நிலவரம் உள்ளது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x