Published : 10 Nov 2020 03:11 AM
Last Updated : 10 Nov 2020 03:11 AM
கடந்த 5 மாதமாக சம்பளம் வழங்காததைக் கண்டித்து, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்த கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கடந்த ஜூன்மாதம் முதல் அக்டோபர் வரை 5 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்கக்கோரி நேற்று தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தொழிலாளர்கள் கூறும்போது, ‘‘நிலுவை சம்பள தொகையை வழங்க வேண்டும் எனக் கோரி ஏற்கெனவே மேலாண்இயக்குநரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அக்டோபர் மாத இறுதிக்குள் வழங்கப்படும் என நிர்வாகம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதுவரை வழங்கப்படவில்லை. தீபாவளி பண்டிகைக்கான முன்பணம் கோரியும் வழங்கப்படவில்லை. தீபாவளி போனஸ் தொகையும் வழங்கப்படவில்லை. எனவே நிலுவையில் உள்ள சம்பளத்தை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT