Published : 08 Nov 2020 03:11 AM
Last Updated : 08 Nov 2020 03:11 AM
பிஹார் மாநிலத்தில் 3-வது மற்றும் கடைசி கட்ட வாக்குப் பதிவு நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: பிஹாரில் கடைசி கட்டமாக 78 தொகுதிகளில் இன்று (நேற்று) வாக்குப் பதிவு நடக்கிறது. இந்தத் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வாக்குகள் அளித்து மக்கள் வரலாறு படைக்க வேண்டும். ஜனநாயக திருவிழாவாக நடக்கும் இந்த தேர்தலில் பிஹார் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வந்து வாக்குகளைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். அதே நேரத்தில் கரோனா வைரஸ் பரவாமல் இருக்க முகக் கவசம் அணியுங்கள். சமூக இடைவெளியுடன் இருங்கள். இவ்வாறு மோடி கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT