Published : 07 Nov 2020 03:14 AM
Last Updated : 07 Nov 2020 03:14 AM
கரோனா தொற்று உறுதியானதால், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழகத்தில் நேற்று புதிதாக 2,370 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் நேற்று ஆண்கள் 1,434, பெண்கள் 936 என மொத்தம்2,370 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதன்மூலம் பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 39,147 ஆக அதிகரித்துள்ளது.
அரசு மருத்துவமனைகளில் முதியோர் உட்பட 21 பேர், தனியார்மருத்துவமனைகளில் 6 பேர் என நேற்று 27 பேர் உயிரிழந்தனர்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏ.பி.சாஹிக்கு தொற்று
காய்ச்சல், இருமல் இருந்ததால் நேற்று முன்தினம் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிவந்தார். அவருக்கு சிடி ஸ்கேன்மற்றும் ஆர்டிபிசிஆர் பரிசோதனைசெய்யப்பட்டது. இதில் அவருக்குகரோனா தொற்று இருப்பது உறுதியானது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மருத்துவமனை டீன் தேரணிராஜனிடம் கேட்டபோது, “தலைமைநீதிபதி ஏ.பி.சாஹிக்கு கரோனாதொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் நலமுடன் உள்ளார். அவருக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன” என்றார்.
கரோனா தொற்றால் பாதிக்கப்படும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நிலையில், தலைமை நீதிபதி, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதை சமூக ஊடகங்களில் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT