Published : 06 Nov 2020 03:16 AM
Last Updated : 06 Nov 2020 03:16 AM

‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் இதுவரை 29 லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்பினர்

புதுடெல்லி: கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நாடுகள் விமான சேவைகளை ரத்து செய்தன. இதனால் அந்த நாடுகளில் தங்கி பணிபுரிந்து வந்த இந்தியர்கள் தாயகம் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்காக ‘வந்தே பாரத்’ திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ் பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 5,362 இந்தியர்கள் நேற்று முன்தினம் தாயகம் திரும்பினர். இதன்மூலம் இதுவரை 29.23 லட்சம் இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். மத்திய வெளியுறவுத் துறை, விமானப் போக்குவரத்துத் துறை, ஏர் – இந்தியா, ஏர் – இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் சில தனியார் விமான நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் இது சாத்தியமாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x