Published : 02 Nov 2020 03:13 AM
Last Updated : 02 Nov 2020 03:13 AM

கடைசி ஆட்டத்தில் சிஎஸ்கேவிடம் தோல்வி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்தது பஞ்சாப் அணி

அபுதாபி

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, தனது கடைசி லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்அணியிடம் தோல்வியடைந்ததால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

அபுதாபியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. கேப்டன் கேஎல் ராகுல் 29, மயங்க் அகர்வால் 26, நிகோலஸ் பூரன் 2, கிறிஸ் கெயில் 12 ரன்களில் ஆட்டமிழந்தனர். 12 ஓவர்களில் பஞ்சாப் அணி 4 விக்கெட்களை இழந்து 73 ரன்கள் எடுத்து தத்தளித்த நிலையில் தீபக் ஹூடா அதிரடியாக விளையாடி 30 பந்துகளில் 4 சிக்சர்கள், 3 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் விளாசினார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய மந்தீப் சிங் 14, ஜேம்ஸ்நீஷம் 2 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

சென்னை அணி சார்பில் லுங்கி நிகிடி 3 விக்கெட்கள் வீழ்த்தினார். 154 ரன்கள் இலக்குடன் விளையாடிய சென்னை அணி 18.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ருதுராஜ் கெய்க்வாட் 49 பந்துகளில் 1 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 62 ரன்களும் டுபிளஸ்ஸிஸ் 43 பந்துகளில் 2 சிக்சர்கள், 4 பவுண்டரியுடன் 48 ரன்களும் விளாசினர். அம்பதி ராயுடு 30பந்துகளில் 2 பவுண்டரியுடன் 30 ரன்கள் சேர்த்து, கெய்க்வாட்டுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

9 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பஞ்சாப்அணி பிளே ஆஃப் சுற்றுவாய்ப்பை இழந்தது. அந்த அணி14 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 8 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று லீக் சுற்றை நிறைவு செய்தது. அதேநேரம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆறுதல் வெற்றியுடன் தொடரில் இருந்து வெளியேறியது.

இன்றைய ஆட்டம்

டெல்லி - பெங்களூரு

இடம்: அபுதாபி

நேரம்: இரவு 7.30

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x