Published : 02 Nov 2020 03:14 AM
Last Updated : 02 Nov 2020 03:14 AM

ரயில்வே மேம்பாலப் பணிகளை தலைமைப் பொறியாளர் ஆய்வு

அரியலூர்: அரியலூர் மாவட்டம் கோக்குடி ரயில்வே கேட்டின் குறுக்கே கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளை நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் தலைமைப் பொறியாளர் எம்.முருகேசன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் நான்கு வழிச்சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கல்லகம் அருகேயுள்ள கோக்குடி ரயில்வே கேட்டின் குறுக்கே கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலப் பணிகளை தலைமை பொறியாளர் முருகேசன் நேற்று பார்வையிட்டார். அப்போது, பணிகளை விரைந்து முடிக்கவும், பணி செயலாக்கத்தின் போது தரத்தை ஆய்வு செய்து உறுதிப்படுத்துமாறும் பொறியாளர்களுக்கும், தரக்கட்டுப்பாட்டு அலுவலர்களுக்கும் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது கண்காணிப்பு பொறியாளர் சத்திய பிரகாஷ், கோட்ட பொறியாளர் அ.ஷாபுதீன், உதவி கோட்ட பொறியாளர் எஸ்.ராஜா, உதவி பொறியாளர் சி.நடராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x