Published : 31 Oct 2020 03:13 AM
Last Updated : 31 Oct 2020 03:13 AM
சென்னை கிண்டி அரசு கரோனாமருத்துவமனையில் நோயாளிகளின் மனஅழுத்தத்தைப் போக்க1,700-க்கும் மேற்பட்ட புத்தகங்களைக் கொண்டு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் அமைக்கப்பட்ட தேசிய முதியோர் நல மருத்துவ மையம், அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய கரோனாமருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. மொத்தம் 750 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவத்துடன் தினமும் யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், நோயாளிகள் தங்களுடைய நேரத்தை பயனுள்ளதாக செலவிடும் வகையில் மருத்துவமனையில் நூலகம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு சிகிச்சைப் பெற்று வீடுகளுக்குத் திரும்பியவர்கள் புத்தகங்களை நூலகத்துக்கு வழங்கி வருகின்றனர்.
1,700 புத்தகங்கள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT