Published : 31 Oct 2020 03:13 AM
Last Updated : 31 Oct 2020 03:13 AM

பரூக் அப்துல்லா வீட்டை விட்டு வெளியேற தடை

தேசிய மாநாடு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாவை தொழுகைக்கு செல்ல அனு மதிக்கவில்லை என அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

நாடு முழுவதும் மிலாது நபிபண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நகரில் உள்ள ஹஸ்ரத்பால் மசூதியில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக தேசிய மாநாடு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா வீட்டைவிட்டு புறப்பட்டுள்ளார். அப்போது அவரை ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்தினர் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அக்கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவில்,"தொழுகைக்கு செல்ல முயன்றபரூக் அப்துல்லா தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறார். பிரார்த்தனை செய்யும் உரிமையை தட்டிப் பறித்திருக்கும் செயல் கண்டிக் கத்தக்கது" என கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x