Published : 31 Oct 2020 03:13 AM
Last Updated : 31 Oct 2020 03:13 AM

தமிழகத்தில் 7.22 லட்சம் பேருக்கு தொற்று சென்னையில் 2 லட்சத்தை நெருங்கியது கரோனா பாதிப்பு ஒரே நாளில் 38 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 22,011 ஆக அதிகரித்துள்ள நிலையில் சென்னையில் 1 லட்சத்து 99,173 என 2 லட்சத்தை நெருங்கி உள்ளது. மேலும் நேற்று மட்டும் 2,608 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். முதியவர்கள் உட்பட 38 பேர் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 1,568, பெண்கள் 1,040 என மொத்தம் 2,608 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 723, கோவையில் 228 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 22,011 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை சென்னையில் 1 லட்சத்து 88,280 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 6 லட்சத்து 87,388 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் 1,047 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 3,924 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். சென்னையில் 7,254 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 23,532 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் முதியவர்கள் உட்பட 21 பேர், தனியார் மருத்துவமனைகளில் 17 பேர் என நேற்று 38 பேர்உயிரிழந்தனர். அதிகபட்சமாக சென்னையில் 13 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11,091 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 3,639 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 1 லட்சத்து 99,173,செங்கல்பட்டில் 43,481, கோவையில் 43,008, திருவள்ளூரில் 37,760 என்ற எண்ணிக்கையில் பாதிப்பு நிலவரம் உள்ளது. 202அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில் இதுவரை 98 லட்சத்து 85,443 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. நேற்று மட்டும் 77,356 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 25,746 பேர், 13 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 6 லட்சத்து 7,253 பேர், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 89,012 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x