ஏஐ தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்: பிரதமர் மோடி

ஏஐ தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்: பிரதமர் மோடி
Updated on
1 min read

புதுடெல்லி: ஜி20 உச்சி மாநாட்​டின் 2-ம் நாள் அமர்​வில் பிரதமர் நரேந்​திர மோடி பேசி​ய​தாவது: சர்​வ​தேச அளவில் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) உள்​ளிட்ட புதிய தொழில்​நுட்​பங்​கள் அதிவேக​மாக வளர்ச்சி அடைந்து வரு​கின்​றன. இந்த தொழில்​நுட்​பங்​களை பொருளா​தா​ர ரீ​தி​யாக பயன்​படுத்​தாமல், மனித குலத்​தின் நன்​மைக்​காக மட்​டுமே பயன்​படுத்த வேண்​டும்.

விண்​வெளி முதல் ஏஐ வரை அனைத்து தொழில்​நுட்​பங்​களி​லும் இந்​தியா அதிவேக​மாக முன்​னேறி வரு​கிறது. இந்​தி​யா​வில் ஏஐ தொழில் ​நுட்​பம் அனைத்து மாவட்​டங்​களை​யும் சென்​றடைய நடவடிக்கை எடுத்து வரு​கிறோம். அனைத்து மொழிகளி​லும் ஏஐ தொழில்​ நுட்​பத்தை பயன்​படுத்தி வரு​கிறோம்.

சர்​வ​தேச அளவில் செயற்கை நுண்​ணறி​வால் பல்​வேறு சவால்​களும் எழுந்​துள்​ளன. இதை பயன்​படுத்தி டீப்​-பேக் வீடியோக்​கள் உரு​வாக்​கப்​படு​கின்​றன. பல்​வேறு குற்​றச் செயல்​கள், தீவிர​வாத தாக்​குதல்​களுக்கு செயற்கை நுண்​ணறிவு பயன்​படுத்​தப்​படு​கிறது. இந்த தொழில்​ நுட்​பம் தவறாக பயன்​படுத்​தப்​படு​வதை தடுக்க உலக நாடு​கள் ஒன்​றிணைந்து செயல்பட வேண்​டும். அடுத்த ஆண்டு பிப்​ர​வரி​யில் இந்​தி​யா​வில் ஏஐ உச்சி மாநாடு நடை​பெற உள்​ளது.

இதில் ஜி20 நாடு​கள் பங்​கேற்க அழைப்பு விடுக்​கிறேன். கரோனா பெருந்​தொற்று காலத்​தில் உலகத்​தின் விநி​யோக சங்​கிலி உடைந்​தது. அந்த இக்​கட்​டான காலத்​தி​லும் 150 நாடு​களுக்கு கரோனா தடுப்​பூசியை இந்​தியா அனுப்பி வைத்​தது. ஒருங்​கிணைந்த வளர்ச்​சி, நியாய​மான வணி​கம், நேர்​மை​யான நிதி ஆதா​ரம் ஆகிய உயரிய கொள்​கைகளை இந்​தியா பின்​பற்​றுகிறது. இவ்​வாறு பிரதமர்​ நரேந்​திர மோடி பேசி​னார்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in