க்ரோக் ஏஐ ஆபாச பட விவகாரம்: எக்ஸ் தளம் பதில் அளிக்க அவகாசம் நீட்டிப்பு

X Platform

X Platform

Updated on
1 min read

புதுடெல்லி: அமெரிக்க தொழில​திபர் எலான் மஸ்​குக்கு சொந்தமான எக்ஸ் சமூக வலை​தளத்தில் பிரிமி​யம் மற்​றும் பிரிமியம் பிளஸ் சந்​தா​தா​ரர்களுக்கு க்ரோக் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) வசதி வழங்​கப்​படு​கிறது.

இந்த க்ரோக் ஏஐ மூலம் நடிகர், நடிகைகள், பிரபலங்​கள், பெண்களின் புகைப்​படங்​களை ஆபாச​மாக மாற்றி வெளியிடப்படு​வ​தாக ஏராள​மான புகார்​கள் எழுந்​தன.

இது தொடர்​பாக எக்ஸ் சமூக வலை​தளத்​தின் தலைமை பொறுப்பு அதி​காரிக்​கு, மத்​திய மின்​னணு, தகவல் தொழில்​ நுட்​பத்துறை கடந்த 2-ம் தேதி 4 பக்க நோட்​டீஸை அனுப்​பியது. அதில், “க்​ரோக் ஏஐ மூலம் உரு​வாக்​கப்​பட்ட அனைத்து ஆபாச படங்​கள், வீடியோக்​களை உடனடி​யாக நீக்க வேண்​டும். இந்த ஏஐ செயலி தவறாக பயன்​படுத்​தப் ​படு​வதை தடுக்க தொழில்​ நுட்​ப ரீ​தி​யாக மாற்​றங்​களை செய்ய வேண்​டும். நோட்​டீஸ் கிடைக்க பெற்ற 72 மணி நேரத்​தில் நடவடிக்கை எடுக்க வேண்​டும்” என்று தெரிவிக்கப்​பட்​டது.

கடும் நடவடிக்கை: இதைத் தொடர்ந்து எலான் மஸ்க் சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “க்ரோக் ஏஐ மூலம் ஆபாச படங்களை உரு​வாக்​குபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும். அவர்​களின் எக்ஸ் சமூக வலைதள கணக்கு நிரந்​தர​மாக முடக்கப்படும்” என்று எச்​சரிக்கை விடுத்​தார்.

இந்த சூழலில் ஆபாச படங்​கள் தொடர்​பாக நடவடிக்கை எடுக்க எக்ஸ் சமூக வலைதள நிறு​வனம் சார்​பில் மத்​திய அரசிடம் கூடு​தல் கால அவகாசம் கோரப்​பட்​டது. இதை ஏற்று ஜனவரி 7-ம் தேதிக்​குள் பதில் அளிக்க மத்​திய மின்​னணு, தகவல் தொழில்​நுட்பத் துறை கால அவ​காசம்​ வழங்​கி உள்​ளது.

<div class="paragraphs"><p>X Platform</p></div>
“திருப்பரங்குன்றம் வழக்கில் முருகன் அருளால் வெற்றி” - ராம.ரவிக்குமார் மகிழ்ச்சி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in