“எந்த நாடும் செய்ய முடியாததை யுபிஐ மூலம் சாதித்த இந்தியா” - பிரான்ஸ் அதிபர் பாராட்டு

டெல்லி ஏஐ உச்சி மாநாட்டில் புகழாரம்
“எந்த நாடும் செய்ய முடியாததை யுபிஐ மூலம் சாதித்த இந்தியா” - பிரான்ஸ் அதிபர் பாராட்டு
Updated on
1 min read

“எந்த நாடும் செய்ய முடி​யாததை, இந்​தியா யுபிஐ உருவாக்​கி சாதித்துள்ளது” என யுபிஐ பயன்​பாடு குறித்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்​ரான் பாராட்டு தெரி​வித்​துள்​ளார்.

டெல்​லி​யில் நடை​பெறும் ஏஐ உச்சி மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்​ரான் நேற்று கலந்து கொண்டு பேசி​ய​தாவது:

பத்து ஆண்​டு​களுக்கு முன்பு மும்​பை​யில் உள்ள தெரு​வோர வியாபாரி​யால் வங்​கிக் கணக்கு தொடங்க முடிய​வில்​லை. அவருக்கு எந்த முகவரி​யும் இருக்​காது, எந்த ஆவணங்​களும் இருக்காது. ஆனால் அந்த வியா​பாரி​யால் பணத்தை தனது போனில் பெற முடிகிறது.

ஏழ்​மை​யுடன் போராடிய கோடிக்​கணக்​கான இந்​தி​யர்​களின் வாழ்வில், யுபிஐ என்ற டிஜிட்​டல் மூலம் பணம் செலுத்​தும் முறை மாற்​றத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது. இது தொழில்​நுட்ப கதை அல்ல. நாகரி​கத்​தின் கதை. எந்த நாடும் செய்ய முடி​யாததை இந்​தியா உரு​வாக்​கி​யுள்​ளது.

140 கோடி மக்​களுக்கு டிஜிட்​டல் அடை​யாளத்​தைக் கொடுத்துள்ளது. இந்​தி​யா​வின் டிஜிட்​டல் உள்​கட்​டமைப்பு வெளிப்​படை​யானது. ஒன்​றிணைந்து செயல்​படக் கூடியது. இறையாண்மை மிக்​கது என்று அழைக்கின்றனர்.

மனிதர்​களின் முன்​னேற்​றத்​துக்கு செயற்கை நுண்​ணறிவை பயன்​படுத்​து​வது​தான் இந்​தி​யா​வின் உறு​திப்​பாடு என்​பதை இந்த உச்சி மாநாட்​டின் கருப்​பொருள் பிர​திபலிக்​கிறது என பிரதமர் மோடி கூறினார்.

புதுமை மற்​றும் பொறுப்​புணர்​வை​யும், தொழில்​நுட்​பம் மற்​றும் மனிதநே​யத்​தை​யும் யார் ஒருங்​கிணைக்​கிறார்​களோ, அவர்​களால்​தான் செயற்கை நுண்​ணறி​வின் எதிர்​காலம் கட்​டமைக்​கப்​படும். இதன் எதிர்​காலத்தை வடிவ​மைக்க இந்​தியா மற்​றும் பிரான்ஸ் உதவும். இவ்​வாறு இமானுவேல்​ மேக்​ரான்​ கூறி​னார்.

“எந்த நாடும் செய்ய முடியாததை யுபிஐ மூலம் சாதித்த இந்தியா” - பிரான்ஸ் அதிபர் பாராட்டு
“ஏஐ அறிவை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவோம்” - டெல்லி மாநாட்டில் பிரதமர் மோடி உறுதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in