

புதுடெல்லி: செல்போன் கோபுரங்கள் நிறுவுவது தொடர்பான மோசடிகள் குறித்து மத்தியத் தொலைத்தொடர்பு துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை, அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
இதுகுறித்து மத்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: செல்ஃபோன் கோபுரங்கள் நிறுவுதல் என்ற பெயரில் சில நேர்மையற்ற நிறுவனங்கள், ஏஜென்சிகள், தனிநபர்கள் பொதுமக்களிடம் அதிகளவில் மாத வாடகை வழங்கப்படும் போன்ற போலியான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றி பணம் வசூலிப்பது குறித்து தொலைத்தொடர்புத் துறையின் கவனத்திற்கு வந்துள்ளது.
இதுபோன்ற நபர்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதுபோல கீழ்கண்ட விஷயங்களையும் மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்
அவர்களின் தொடர்பு விவரங்கள்: https://dot.gov.in/relatedlinks/director-general-telecom என்ற இணையதளத்தில் கிடைக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.