

சென்னை: இந்தியா மற்றும் உலக ஸ்மார்ட்போன் சந்தையில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் 10T 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஃபிளேக் ஷிப் (Flagship) போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
சீனாவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் உட்பட எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது ஒன்பிளஸ் நிறுவனம். கடந்த 2013 வாக்கில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இப்போது இந்த நிறுவனம் ஒன்பிளஸ் 10T 5ஜி போனை இந்தியா உட்பட சர்வதேச சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
நேரலை நிகழ்வு மூலம் இந்த போனின் அறிமுகம் அரங்கேறி இருந்தது. இப்போது இந்த போனுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. வரும் 6-ம் தேதி முதல் இந்தியாவில் இந்த போன் விற்பனை செய்யப்பட உள்ளது.
சிறப்பு அம்சங்கள்