Published : 16 Apr 2022 08:59 PM
Last Updated : 16 Apr 2022 08:59 PM

ப்ரீமியம்
விமானத்தில் தீப்பற்றி எரிந்த போன் | சில நேரங்களில் ஸ்மார்ட்போன்கள் திடீரென தீப்பற்ற காரணம் என்ன? - வல்லுநர் விளக்கம்

கோப்புப் படம்

புதுச்சேரி: அண்மையில் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் ஒன்றில் பயணியின் ஸ்மார்ட்போன் திடீரென தீப்பற்றி எரிந்ததாக தகவல் வெளியானது. இந்தத் தகவலை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) உறுதி செய்துள்ளது.

“கடந்த 14 ஆம் தேதியன்று அசாம் மாநிலம் திப்ருகார் நகரிலிருந்து தலைநகர் டெல்லி வந்த 6E 2037 விமானத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அவசர கால சூழலைக் கையாள்வதில் பயிற்சி பெற்றிருந்த விமான கேபின் குழுவினர் தீயை அணைத்துள்ளனர். இதில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை” என அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது சம்பந்தப்பட்ட தனியார் விமான நிறுவனம். வழக்கத்துக்கு மாறாக போன் அதிகளவு வெப்பமடைந்த காரணத்தால் போனில் தீப்பற்றி உள்ளது எனவும், இதற்கு காரணம் போனின் பேட்டரி எனவும் டிஜிசிஏ தெரிவித்துள்ளது. போனில் இருந்து புகை மற்றும் தீப்பொறி வெளி வருவதைக் கவனித்த விமானக் குழுவினர் தீ அணைக்கும் கருவியைக் கொண்டு தீயை அணைத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x