Published : 14 Sep 2015 02:22 PM
Last Updated : 14 Sep 2015 02:22 PM

உணவைப் பாதுகாக்க..

உணவுப் பொருட்களை பாதுகாக்க வேண்டும் என்றால் காற்றில்லாமல் அடைத்துவைக்க வேண்டும். கடைகளில் பேக்கிங் செய்யப்படும் பொருட்களில் அது சாத்தியம்.

ஆனால் வீடுகளில் அப்படி செய்ய வாய்ப்பில்லை. தற்போது அதற்கும் கருவி வந்துவிட்டது. இந்த கருவியை கவருக்குள் வைத்து பொருட்களை அடைத்துவிட்டு காற்றை உறிஞ்சி எடுத்துவிட்டு சீலிங் செய்து விடலாம்.

இதனால் பொருட்களை அடைத்துள்ள கவருக்குள் காற்று இருக்காது. பொருளும் நீண்ட நாட்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். தேவைப்படும்போது இந்த சீலிங் கவரை பிரித்து, காற்றை உள்ளே செலுத்தி பயன்படுத்த எடுத்துக் கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x