Last Updated : 11 Feb, 2020 05:15 PM

 

Published : 11 Feb 2020 05:15 PM
Last Updated : 11 Feb 2020 05:15 PM

மொபைல் செயல்பாட்டை மந்தமாக்கிய ஆப்பிள் நிறுவனத்துக்கு ரூ.194 கோடி அபராதம்

பிரான்ஸ் நாட்டின் நுகர்வோர் அமைப்பான போட்டி, நுகர்வு மற்றும் மோசடியை ஒடுக்குவதற்கான இயக்குநரகம் (DGCCRF), ஆப்பிள் நிறுவனத்துக்கு 25 மில்லியன் யூரோக்களை அபராதமாக வித்துள்ளது. இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.194 கோடிக்கு ஈடான இந்த அபராதம், பிரான்ஸ் நாட்டில் மொபைல் செயல்பாட்டை மந்தமாக்கியதற்காக விதிக்கப்பட்டுள்ளது.

2017-ல் வெளியிடப்பட்ட ஆப்பிள் மொபைல்களுக்கான ஐஓஎஸ் அப்டேட் 10.2.1 மற்றும் 11.2 ஆகியவை மொபைல்களை மந்தமாக்கும் என்பதை ஆப்பிள் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஐஃபோன் 6, எஸ்ஈ மற்றும் 7 ஆகிய பழைய மாடல்களின் பேட்டரி செயல்பாட்டை இந்த அப்டேட்கள் பாதித்தன. இதனால் பயனர்கள் தங்கள் மொபைல்களின் பேட்டரிகளை மாற்றவோ, வேறொரு மொபைலை வாங்கவோ நிர்பந்திக்கப்பட்டனர்.

தங்களது தவறான விளம்பர முறை பற்றியும், அபராதத்தைக் கட்ட ஒப்புக்கொண்டதைப் பற்றியும் ஆப்பிள் நிறுவனம் தங்கள் தளத்தில் ஒரு அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் ஆப்பிள் நிறுவனத்துக்கு அபராதம் விதித்துள்ள பிரான்ஸ் இயக்குநரகம் கேட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x