Published : 22 Jun 2015 11:57 AM
Last Updated : 22 Jun 2015 11:57 AM

விண்வெளி சோலார் நிலையம்

உலகை மாற்றும் தொழில்நுட்பங்களை கண்டறிவதில் உலகத்துக்கே அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான நாசா வழிகாட்டி வருகிறது.

அந்த வகையில் இன்னொரு உலகப் போட்டிக்குத் தயாராகி வருகிறது நாசா. ஏற்கெனவே விண்வெளியை மையமாக வைத்து பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விண்வெளியில் நாசாவுக்கு நிரந்தர ஆராய்ச்சி மையமே இருக்கிறது.

இந்த வரிசையில் தற்போது விண்வெளியில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கான திட்டத்தில் இறங்கியுள்ளது.

இதற்கான சன் டவர், ஸ்பேல் ஆல்பா, ஸ்பேஸ் டக்போட்ஸ், சான்விட்ச் கான்செப்ட் என பல திட்டங்கள் ஆய்வு நிலையில் உள்ளன.

இதற்காக சுமார் ரூ.75 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. ரூ. 1.26 லட்சம் கோடி வரை செலவாகும் என மதிப்பிட்டுள்ளது. சன் டவர் திட்டத்தில் தரையிலிருந்து வானில் சோலார் தகடுகளை அமைத்துச் செல்கிறார்கள் என்றால் ஸ்பேஸ் ஆல்பா திட்டம் சோலார் தகடுகளை அமைந்து சாட்டிலைட் போல வானில் பறக்க விடுவார்களாம்.

இதில் சேமிக்கப்படும் மின்சாரம் மின் அலைகள் மூலம் தரைப் பகுதி சேமிப்பு நிலையத்துக்கு அனுப்பப்படும். இந்த திட்டங்கள் மூலம் 24 மணி நேரமும் 365 நாட்களும் மின் உற்பத்தி செய்ய முடியும் என்கிறது நாசா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x