

நிலவில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள புதிய ரோபோ ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
மனிதனைப் போல இரண்டு கால்களில் நிற்கவும், நடக்கவும் செய்கிறது. அதே நேரத்தில் மேடு பள்ளங்களில் ஏறி இறங்குவதற்கு ஏற்ப நான்கு கால் பிராணியைப்போல குனிந்து கொண்டும் செயல்படுகிறது. அப்படியே நான்கு கால்களால் நடக்கவும் செய்கிறது.
இதனால் நிலவின் மேடு பள்ளமான பகுதிகளிலும் தங்குதடையில்லாமல் ஆராய்ச்சி மேற்கொள்ள முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.