Last Updated : 05 Mar, 2019 11:00 AM

 

Published : 05 Mar 2019 11:00 AM
Last Updated : 05 Mar 2019 11:00 AM

செயலி புதிது: குழு பேச்சு பேசலாம்!

செல்பேசி சேவையை வழங்கும் ஜியோ நிறுவனம், ‘ஜியோ குருப் டாக்’ எனும் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்தச் செயலி மூலம் ஒன்றுக்கும் மேற்பட்டோருடன் குழுவாக பேச முடியும். கான்பிரன்ஸ் அழைப்புபோல பேசும் வசதியை இது அளிக்கிறது. ஜியோ சந்ததாரர்களுக்காக பிரத்யேகமாக இந்தச் செயலி அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும், மற்ற செல்பேசி சேவை பயனாளிகளையும் அழைத்து பேசலாம். இந்தச் செயலியில் பேசும்போது, தேவையெனில் மற்றவர்களை ‘மியூட்’ செய்துவிட்டு ஒருவருடன் மட்டும் பேசும் வசதியும் உண்டு.

ஆண்ட்ராய்டு, ஐபோன்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  தற்போதைய நிலையில் குரல் மூலமாக மட்டுமே இதில் தொடர்பு கொள்ள முடியும். அடுத்த கட்டமாக வீடியோ அழைப்பு வசதியும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தகவல்களுக்கு: https://play.google.com/store/apps/details?id=com.jio.grouptalk&hl=en

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x