Published : 31 Aug 2014 12:00 AM
Last Updated : 31 Aug 2014 12:00 AM

இ-மெயிலுக்கு வயது 32

இன்று உலகம் முழுவதும் பரவலாக தகவல்தொடர்பில் அதிகம் பயன்படுத்தப்படும் இ-மெயில் கண்டுபிடிக்கப்பட்டு நேற்றுடன் (ஆகஸ்ட் 30) 32 ஆண்டுகள் ஆனது.

இ-மெயில் தொடர்பாக இந்தியர்கள் அனைவரும் பெருமைப்படக் கூடிய விஷயம் உள்ளது. இ-மெயிலை கண்டுபிடித்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர் வி.ஏ. சிவா அய்யாத்துரை. இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது நமக்கு கூடுதல் பெருமை.

சிறுவயதிலேயே அமெரிக்கா சென்ற சிவா அய்யாத்துரை 1982 ஆகஸ்ட் 30-ல் தான் கண்டுபிடித்த இ-மெயிலுக்கு அதிகாரப்பூர்வமாக அமெரிக்க அரசிடம் அங்கீகாரம் பெற்றார். 1978-ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியில் படித்தபோதே சிவா அய்யாத்துரை மின் அஞ்சல் முறையை செயல்படுத்தத் தொடங்கிவிட்டார். 1982-ல் இ-மெயில் என பெயரிட்டு காப்புரிமை பெற்றார்.

எனினும் இ-மெயிலை கண்டுபிடித்ததில் பல்வேறு தரப்பினரும் உரிமை கோரியதால் சர்ச்சைகள் தொடர்ந்தே வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x