

இணைய வழியில் பணம் பறிக்கும் சைபர் திருடர்களின் பழைய டெக்னிக் இது. உங்களுக்கு லாட்டரியில் இவ்வளவு பவுண்டு, டாலர் விழுந்திருக்கிறது என்று தொடர்பு எண்களோடு குறுந்தகவல் அனுப்பி, ஏமாற்றிப் பணத்தைக் கறப்பது, சைபர் திருட்டு அறிமுகமான காலத்தில் விரிக்கப்பட்ட வலை.
அந்த டெக்னிக்கை இப்போதும் பயன்படுத்தி சைபர் திருடர்கள் பணம் பறிக்கிறார்கள் என்பது, மக்கள் இன்னும் விழிப்புணர்வோ அல்லது எச்சரிக்கை உணர்வுடனோ இல்லை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மத்திய பிரதேசத்தில் ஒரு பெண் இந்த வலையில் சிக்கிய கதை இதை உணர்த்துகிறது.