

சென்னை: இந்தியாவில் கூகுள் பிக்சல் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி உள்ளது. இந்த போன்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் உள்ளிட்ட விவரங்களை விரிவாக பார்ப்போம். இது கடந்த ஆண்டு வெளியான கூகுள் பிக்சல் 9 மாடலின் அடுத்த வெர்ஷனாக வெளிவந்துள்ளது.
கடந்த 2016 முதல் கூகுள் பிக்சல் போன்களை கூகுள் நிறுவனம் தயாரித்து சந்தையில் விற்பனை செய்து வருகிறது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இந்த போன்கள் இயங்குகின்றன. ஆண்டுதோறும் புதிய மாடல் ‘கூகுள் பிக்சல்’ போன்களை சந்தையில் கூகுள் நிறுவனம் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது கூகுள் பிக்சல் 10 சீரிஸ் போன்கள் இந்தியா உட்பட சர்வதேச சந்தையில் அறிமுகமாகி உள்ளன. பிக்சல் வாட்ச் 4 மற்றும் பிக்சல் பட்ஸ் 2a-வும் இதோடு அறிமுகமாகி உள்ளன.
வழக்கம் போலவே ஆண்டுதோறும் நடைபெறும் கூகுளின் Made by Google நிகழ்வில் இந்த போன்கள் அறிமுகமாகின. அந்த வகையில் கூகுள் பிக்சல் 10, பிக்சல் 10 புரோ, பிக்சல் 10 புரோ எக்ஸ்எல், பிக்சல் 10 புரோ ஃபோல்ட் போன்கள் அறிமுகமாகி உள்ளன.
கூகுள் பிக்சல் 10 சீரிஸ் போன்கள் அனைத்தும் டென்சர் ஜி5 ப்ராசஸரில் இயங்குகிறது. மேலும், இது அனைத்தும் ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை கொண்டுள்ளன. 7 ஆண்டுகளுக்கு இயங்குதள அப்டேட் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்டை உறுதி செய்துள்ளது கூகுள் நிறுவனம். இதில் ‘Gemini நானோ’ ஏஐ அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
பிக்சல் 10 புரோ சிறப்பு அம்சங்கள் என்னென்ன?