

சென்னை: இந்தியாவில் ரெட்மி நோட் 14 SE ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
சீன எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சியோமிக்கு சொந்தமான துணை நிறுவனம் தான் ரெட்மி. கடந்த 2013 முதல் பட்ஜெட் விலையில் போன்களை இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய போன்களை சந்தையில் அறிமுகம் செய்வதை ரெட்மி நிறுவனம் வழக்கமாகக் கொண்டுள்ளது.
அந்த வகையில் தற்போது ரெட்மி நோட் 14 எஸ்இ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. ஏற்கெனவே ரெட்மி நோட் 14 வரிசையில் ரெட்மி நோட் 14 புரோ+, ரெட்மி நோட் 14 புரோ மற்றும் ரெட்மி நோட் 14 மாடல்கள் சந்தையில் வெளிவந்துள்ளன. வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி இந்த போன் விற்பனைக்கு வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது.
ரெட்மி நோட் 14 SE ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?