

குரல்வழி டைப்பிங் பிரபல மாகவும் எளிதாகவும் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். இதற்கென பிரத்யேகச் சேவை களும் இருக்கின்றன. இப்போது, மைக்ரோசாப்டின் எழுது மென்பொருளான வேர்டிலும் குரல்வழி டைப்பிங் வசதி அறிமுகம் ஆகியுள்ளது. வேர்டு மென்பொருளின் இல்லத்தி லிருந்து, டிக்டேட் பட்டனை கிளிக் செய்து, எழுத நினைப்பதை பேசத் தொடங்கினால், திரையில் தானாக வாசகங்கள் டைப் ஆகிவிடுகின்றன.
நிறுத்தல் குறி போன்றவற்றையும் பேச்சிலேயே குறிப்பிடலாம். இவ்வளவு ஏன், எந்த இடத்தில் வார்த்தைகளைப் பெரிதாக்க வேண்டும் என்பது போன்ற ஃபார்மட் சார்ந்த கட்டளைகளையும் குரல் வழியே வழங்கலாம். வேர்டில் எழுதவும் பயன்படுத்தலாம். குறிப்புகளை எழுதி வைக்கவும் செய்யலாம். ஆங்கிலம், பிற மொழிகளில் பயன்படுத்தலாம். ஆனால், இதற்கு மைக்ரோசாப்ட் 365 சேவையை வைத்திருக்க வேண்டும்.