

பெங்களூருவைச் சேர்ந்த பிரசன்னாவுக்கு திறன்பேசியில் மூழ்கிக் கிடக்கும் பழக்கம் உண்டு. ஒரு சிம் மட்டுமே வைத்திருந்த பிரசன்னா, வேறு ஒரு பிசினஸுக்காக இன்னொரு சிம் கார்டு வாங்கினார். அதைத் தன்னுடைய திறன்பேசியில் இரண்டாவது சிம் கார்டாகப் பொருத்தினார்.
பொதுவாகப் புதிய சிம் கார்டு வாங்கினால், உடனடியாக கனெக்ஷன் கிடைக்காது. சில மணி நேரத்துக்குப் பின்பே அது ஆக்டிவேட் ஆகும். அதன் பிறகுதான் அழைப்புகள் வரத் தொடங்கும். ஆனால், அன்று புதிய சிம் கார்டைப் பொருத்தி குறிப்பிட்ட சில மணி நேரத்திலேயே பிரசன்னாவுக்கு அழைப்பு வந்தது.