வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிதமான மழை வாய்ப்பு!

படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி 

படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி 

Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் நாளை (டிச.16) முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக நாளை (டிச.16) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 17-ம் தேதி தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 18-ம் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 19 முதல் 21-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (டிச.16) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளை முதல் 18-ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான குளிர் அளவுகளின்படி மலைப் பகுதிகளான கொடைக்கானலில் ஊட்டியில் 5.4 டிகிரி, 6 டிகிரி, குன்னூரில் 8 டிகிரி, சமவெளி பகுதிகளான தருமபுரியில் 15.5 டிகிரி, வேலூர், சேலம், கோவையில் 17 டிகிரி, மதுரை, திருச்சி, அருப்புக்கோட்டையில் 18 டிகிரி, நாகப்பட்டினம், காரைக்காலில் 19 டிகிரி, புதுச்சேரி, சென்னை மீனம்பாக்கத்தில் 20 டிகிரி, நுங்கம்பாக்கத்தில் 21 டிகிரி குளிர் பதிவாகியுள்ளது என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p>படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி&nbsp;</p></div>
ஆகாஷ் பாஸ்கரன் தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரிய அமலாக்கத் துறை உதவி இயக்குநர்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in