விநாடிக்கு 12,000 கனஅடியாக ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து சரிந்தது

விநாடிக்கு 12,000 கனஅடியாக ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து சரிந்தது
Updated on
1 min read

தருமபுரி/மேட்டூர்: ஒகேனக்​கல் காவிரி​யாற்​றில் நீர்​வரத்து விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடி​யாக உயர்ந்து 12 ஆயிரம் கனஅடி​யாக சரிந்​தது.

தரு​மபுரி மாவட்​டம் ஒகேனக்​கல் காவிரி​யாற்​றில் கடந்த 17-ம் தேதி 5 மணி அளவீட்​டின்​ போது விநாடிக்கு 9,500 கனஅடி​யாக நீர்​வரத்து பதி​வானது. அன்று காலை 6 மணி​யளவில் விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி​யாக நீர்​வரத்து உயர்ந்தது. நேற்று காலை 6 மணி அளவீட்​டின்​போது நீர்​வரத்து விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடி​யாக உயர்ந்​தது. ஆனால், காலை 10 மணி​யள​வில் நீர்​வரத்து விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி​யாகக் படிப்படியாகக் குறைந்​தது.

இதனிடையே, மேட்​டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 8,555 கனஅடி​யாகவும், மாலை விநாடிக்கு 12,174 கனஅடி​யாக​வும், நேற்று காலை விநாடிக்கு 12,350 கனஅடி​யாக​வும் உயர்ந்த நீர்​வரத்து மாலை​யில் விநாடிக்கு 12,243 கனஅடி​யாக குறைந்தது.

குடிநீர் தேவைக்​காக அணையி​லிருந்து விநாடிக்கு 2,000 கனஅடி நீர் திறக்​கப்​பட்டு வரு​கிறது. திறக்​கப்​படும் நீரின் அளவை விட, நீர்​வரத்து அதி​கமாக உள்​ளதால் நீர்​மட்​டம் உயர்ந்து வரு​கிறது. நீர்​மட்​டம் 82.98 அடி​யாக​வும், நீர் இருப்பு 44.99 டிஎம்​சி​யாக​வும் உள்ளது.

விநாடிக்கு 12,000 கனஅடியாக ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து சரிந்தது
காலே டெஸ்ட் போட்டியில் 372 ரன்கள் இலக்கு: 4 விக்கெட்களை இழந்து இலங்கை அணி திணறல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in