கும்பகோணத்தை தனி மாவட்டமாக முதல்வர் விஜய் விரைவில் அறிவிப்பார்: அமைச்சர் வினோத் உறுதி

முதல்வர் விஜய்

முதல்வர் விஜய்

Updated on
1 min read

கும்பகோணம்: கும்​பகோணத்தை தனி மாவட்​ட​மாக தமிழக முதல்​வர் விஜய் விரை​வில் அறி​விப்​பார் என மாநில வேளாண்​மைத் துறை அமைச்​சர் வினோத் தெரி​வித்​தார்.

கும்​பகோணத்​தில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறியது: 2028 மாசி மகாமக விழா தொடர்​பாக, அறநிலை​யத் துறை அமைச்​சருடன் ஆலோ​சனை நடத்​தப்​பட்டு வரு​கிறது. அந்த விழாவுக்கு 50 லட்​சம் பக்​தர்​கள் வரை வரு​வார்​கள் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. எனவே, மகாமக விழாவுக்​கு வரும் பக்தர்களின் வசதிக்காக மேற்​கொள்ள வேண்​டிய பணி​கள், ஏற்​பாடு​கள், நிறைவேற்​றப்பட வேண்​டிய அடிப்படை வசதி​கள் குறித்து அதிகாரிகள் தரப்பில் பட்​டியல் தயாரிக்​கப்​பட்டு வரு​கிறது.

மேலும் கும்​பகோணத்தை தனி மாவட்​ட​மாக அறி​விப்​ப​தற்​கான முயற்​சியை மேற்​கொண்டுவரு​கிறோம். கும்​பகோணத்தை தனி மாவட்​ட​மாக முதல்​வர் விஜய் விரை​வில் அறி​விக்க உள்ளார். கும்​பகோணத்​தில் சுற்​றுச்​சாலை அமைக்​கும் பணி​யில் 3-ம் கட்​டப் பணி இன்​னும் தொடங்​கப்​ப​டா​மல் உள்​ளது குறித்து எனது கவனத்​துக்கு தற்​போது வந்​துள்​ளது.

அப்​பணியை விரை​வாக மேற்​கொள்ள நடவடிக்கை எடுக்​கப்​படும். முந்​தைய ஆட்​சிக்​ காலத்​தில் தொடங்​கப்​பட்​டு, இது​வரை முடி​யாத திட்​டங்​கள் குறித்து ஆய்வு செய்ய அலு​வலர்​களுக்கு அறி​வுறுத்​தி​யுள்​ளோம். இவ்​வாறு அவர் கூறி​னார்​.

<div class="paragraphs"><p>முதல்வர் விஜய் </p></div>
லெபனான் மீது வான்வழி தாக்குதல்: இஸ்ரேலுக்கு ட்ரம்ப் கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in