விவாகரத்து வழக்கு விசாரணை: ஜூன் 15-ல் ஆன்லைன் மூலம் விஜய் ஆஜராக அனுமதி

செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவு
விவாகரத்து வழக்கு விசாரணை: ஜூன் 15-ல் ஆன்லைன் மூலம் விஜய் ஆஜராக அனுமதி
Updated on
1 min read

செங்கல்பட்டு: தவெக தலை​வர் விஜய் - சங்​கீதா விவாகரத்து வழக்கு விசா​ரணை ஜூன் 15-ம் தேதிக்கு தள்​ளிவைக்​கப்​பட்​டது. அன்று ஆன்​லைன் வாயி​லாக ஆஜராக விஜய்க்கு அனு​மதி அளித்து செங்​கல்​பட்டு குடும்ப நல நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது.

விஜய்​யின் மனைவி சங்​கீதா விவ​ாகரத்து கோரி பிப்​.24-ல் செங்​கல்​பட்டு முதன்மை அமர்வு நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தார்.

அதில், தனது கணவரான விஜய்க்கும் நடிகை ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் தன்னால் இணைந்து வாழ முடியாது என்பதாலும் விவகாரத்து வழங்குமாறு கோரியிருந்தார்.

இந்த மனு செங்​கல்​பட்டு குடும்ப நல நீதி​மன்​றத்​துக்கு மாற்​றப்​பட்டு விசா​ரணைக்கு ஏற்​றுக் கொள்​ளப்​பட்​டது.

இந்த வழக்கு ஏப்​.20-ம் தேதி (நேற்​று) விசா​ரணைக்கு வந்​தது. முன்​ன​தாக விஜய் தரப்​பில், விசா​ரணைக்கு ஆன்​லைன் வாயி​லாக ஆஜராக நீதி​மன்ற அனு​மதி கோரி மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது.

இந்​நிலை​யில் நேற்று விசா​ரணை​யில் இருதரப்பு வழக்​கறிஞர்​கள் மட்​டும் நீதி​மன்​றத்​தில் ஆஜராகினர். அ்ப்போது இந்த வழக்கு விசா​ரணையை ஜூன் 15-ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

மேலும் அன்​றைய விசா​ரணை​யில் விஜய் ஆன்​லைன் மூலம் ஆஜராக அனுமதி அளித்தும் செங்​கல்​பட்டு குடும்ப நல நீதி​மன்​றம் உத்தர​விட்​டது.

விவாகரத்து வழக்கு விசாரணை: ஜூன் 15-ல் ஆன்லைன் மூலம் விஜய் ஆஜராக அனுமதி
டெல்டா, தென் கடலோர மாவட்டங்களில் இன்றுமுதல் 26-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in