பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் ஒன்றுபட்டு நிற்போம்: குடியரசு துணைத் தலைவர் கருத்து

கோவை குண்டு வெடிப்பு நினைவு தினம்
பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் ஒன்றுபட்டு நிற்போம்: குடியரசு துணைத் தலைவர் கருத்து
Updated on
1 min read

கோவை: 1998 பிப்​ர​வரி 14-ம் தேதி கோவை​யில் தொடர் குண்டு வெடிப்​பில் 58 பேர் உயி​ரிழந்​தனர். 250-க்​கும் மேற்​பட்​டோர் படு​காயமடைந்​தனர். இதையொட்​டி, இந்து அமைப்​பு​கள் சார்​பில் கோவை​யில் ஆண்​டு​தோறும் பிப்​ர​வரி 14-ம் தேதி, குண்டு வெடிப்​பில் உயி​ரிழந்​தவர்​களுக்கு புஷ்​பாஞ்​சலி நடத்​தப்​பட்டு வரு​கிறது.

இதையொட்​டி, குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன், தனது சமூகவலை​தளப் பக்​கத்​தில் பதிவிட்டிருப்பதாவது: கோவை தொடர் குண்​டு​வெடிப்​பு​களில் உயி​ரிழந்த அப்​பாவி மக்​களை இந்​நாளில் கனத்த மனதுடன் நினை​வு​கூர்ந்​து, எனது ஆழ்ந்த அஞ்​சலியை செலுத்​துகிறேன்.

அது நம் தேசத்​தின் வரலாற்​றில் மறக்க முடி​யாத, இருண்ட பக்​க​மாகும். முன்​னாள் துணைப் பிரதமர் எல்​.கே.அத்​வானி கோவை வந்த நேரத்​தில் நிகழ்ந்த இந்த கொடூர குண்​டு​வெடிப்​பு​கள், பல குடும்​பங்​களின் வாழ்​வில் ஆறாத காயங்​களை ஏற்​படுத்​தி, நாட்​டின் மனசாட்​சி​யையே உலுக்​கியது. அந்த நாளின் பயமும், பதற்​ற​மும் நிறைந்த சூழ்​நிலை இன்​றும் என் நினை​வில் ஆறாத வடு​வாகப் பதிந்​துள்​ளது. அன்று நான் மயி​ரிழை​யில் உயிர் தப்​பினேன்.

இந்​நாளில் உயி​ரிழந்த ஒவ்​வொரு ஆன்​மாவை​யும் பணிவுடன் நினை​வு​கூர்ந்​து, துயரத்​தில் வாழும் குடும்​பங்​களு​டன் ஒரு​மித்த உணர்​வில் நின்​று, அவர்​களது துயரங்​களில் பங்​கெடுத்​துக் கொள்​கிறேன்.

இந்​நாளில், அனை​வரும் பயங்​கர​வாதத்​துக்கு எதி​ரான போரில் ஒன்​று​பட்டு நின்​று, அமை​தி, ஒற்​றுமை மற்​றும் தேசிய ஒரு​மைப்​பாட்​டைப் பாது​காக்​கும் உறு​தி​மொழி ஏற்​போம். இவ்​வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்​ளது.

பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் ஒன்றுபட்டு நிற்போம்: குடியரசு துணைத் தலைவர் கருத்து
பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த பிஎன்பி கட்சி: இந்தியா உடனான உறவைப் பேண விருப்பம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in