வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் பிப்.8-ல் நடத்தப்படும்: அமைச்சர் அறிவிப்பு

வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் பிப்.8-ல் நடத்தப்படும்: அமைச்சர் அறிவிப்பு
Updated on
1 min read

தமிழ்நாடு திருக்கோயில் உபயதாரர்கள் சார்பில் சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு கடந்த ஆண்டு 15 லட்சம் பிஸ்கட் பாக்கெட்கள் அனுப்பப்பட்டன.

அதேபோல, இந்த ஆண்டும் 15 லட்சம் பிஸ்கட் பாக்கெட்கள் அனுப்பப்படுகின்றன. முதல் கட்டமாக கடந்த 7-ம் தேதி 5 லட்சம் பாக்கெட்கள் அனுப்பப்பட்ட நிலையில், 2-ம் கட்டமாக நேற்று 4 கன்டெய்னர் லாரிகள் மூலம் 5 லட்சம் பிஸ்கட் பாக்கெட்கள் அனுப்பப்பட்டன. சென்னை மண்ணடி காளிகாம்பாள் கோயிலில் நடைபெற்ற நிகழ்வில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கொடியசைத்து வாகனங்களை அனுப்பி வைத்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சபரிமலை பக்தர்களுக்காக ஜனவரி 5-ம் தேதி மேலும் 5 லட்சம் பிஸ்கட் பாக்கெட்கள் அனுப்பி வைக்கப்படும். திமுக அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை 3,956 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. சென்னை வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயிலில் 4,000-வது கும்பாபிஷேகம் 2026 பிப்.8-ம் தேதி நடைபெற உள்ளது.

8,027 ஏக்கர் நிலங்கள் மீட்பு: 1,068 கோயில்களுக்கு சொந்தமான ரூ.8,258 கோடி மதிப்பிலான 8,027 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. இதுவரை 2.27 லட்சம் ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு 1.49 லட்சம் எல்லைக் கற்கள் நடப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் பிப்.8-ல் நடத்தப்படும்: அமைச்சர் அறிவிப்பு
மெல்பர்ன் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இங்கிலாந்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in