நீதிபதிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்: மக்களவை தலைவருக்கு விஹெச்பி கடிதம்

நீதிபதிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்: மக்களவை தலைவருக்கு விஹெச்பி கடிதம்
Updated on
1 min read

மதுரை: உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதனுக்கு எதி​ராக காங்​கிரஸ் கூட்​டணி கட்சி எம்​.பி.க்​கள் அளித்த மனு​வைத் தள்​ளு​படி செய்ய வேண்​டும் என்று மக்​களவை தலை​வருக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் சார்​பில் கடிதம் அனுப்​பப்​பட்​டுள்​ளது.

இது தொடர்​பாக விஹெச்பி மாநில இணைப் பொதுச் செய​லா​ளர் வழக்​கறிஞர் சந்​திரசேகரன், மக்​கள​வைத் தலை​வருக்கு அனுப்​பி​யுள்ள கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் உள்ள பாரம்​பரியமிக்க தீபத்​தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட உயர் நீதி​மன்ற நீதிபதி ஜி.ஆர்​. சு​வாமி​நாதன் தீர்ப்பில் எந்த குறை​யும் கூற முடி​யாது.

ஆனால், சிறு​பான்​மை​யினர் வாக்கு வங்கி அரசி​யல் செய்​யும் காங்​கிரஸ், திமுக கூட்​டணி எம்​.பி.க்​கள் நீதிபதியை பதவி நீக்​கம் செய்​யக் கோரி மனு அளித்​துள்​ளனர். இது நீதித் துறைக்கு விடப்​பட்ட மிகப்​பெரிய அச்​சுறுத்​தலாக உள்​ளது.

இந்த தீர்​மானத்தை ஏற்​றால், முக்​கிய​மான வழக்​கு​களில் இனி நீதிபதி​கள் சட்​டத்​துக்கு உட்​பட்டு உத்​தரவு பிறப்​பிக்க முடி​யாத சூழ்​நிலை ஏற்​படும். எனவே, அம்​மனுவை தள்​ளு​படி செய்ய வேண்​டும். திருப்​பரங்​குன்​றம் கார்த்​திகை தீப வழக்​கில் நீதிபதி ஜி.ஆர்​.

சு​வாமி​நாதன் பிறப்​பித்த உத்​தர​வின்​படி, திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத்​துணில் தீபம் ஏற்​று​மாறு தமிழக அரசுக்கு உத்​தர​விட வேண்​டும்.

சட்​டத்​தின் ஆட்​சியை தமிழகத்​தில் நிலைநிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவ்​வாறு கடிதத்​தில் கூறப்​பட்​டுள்​ளது.

நீதிபதிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்: மக்களவை தலைவருக்கு விஹெச்பி கடிதம்
முதுமலையில் பெண்ணை கொன்ற புலி கூண்டில் சிக்கியது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in