

மு. வீரபாண்டியன் |கோப்புப் படம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் விழுப்புரத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் கூறியதாவது:
கடந்த 20 நாட்களாக தமிழகம் முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்துவருகிறோம். இந்தத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவான பெரும் அலை வீசுகிறது.
தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்த பின்னர், திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு மேலும் அதிகரித்துள்ளது.தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுககூட்டணி வரலாறுகாணாத வெற்றியைப் பெறும். யார் கரம் ஓங்கி விடக்கூடாது என்பதில் தமிழக மக்கள் தெளிவான முடிவை எடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.