மத்திய அமைச்சரின் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை - அமைச்சர் சிவசங்கர்

ரயில்வே திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரம்
மத்திய அமைச்சரின் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை - அமைச்சர் சிவசங்கர்
Updated on
2 min read

திருச்சி: ரயில்வே திட்​டங்​களுக்கு தமிழக அரசு நிலம் கையகப்​படுத்தி தர தாமதப்​படுத்​து​வ​தாக உண்மைக்குப் புறம்​பான தகவல்​களை மத்​திய ரயில்வே அமைச்​சர் கூறி​யுள்​ள​தாக, மாநில போக்​கு​வரத்​துத் துறை அமைச்​சர் எஸ்​.எஸ்​.சிவசங்​கர் தெரி​வித்​துள்​ளார்.

திருச்​சி​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: பிரமதருக்கு தமிழக முதல்​வர் அண்​மை​யில் எழு​திய கடிதத்​தில், ‘தமிழக ரயில்வே திட்​டங்​களுக்கு முன்​னுரிமை கொடுத்து செயல்​படுத்த வேண்​டும்’ என கோரிக்கை வைத்​தார். ஆனால், ரயில்வே திட்​டங்​களுக்கு தமிழக அரசு நிலம் கையகப்​படுத்தி தரவில்லை என்று உண்​மைக்​குப் புறம்​பான தகவல்​களை மத்​திய ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் தெரி​வித்​துள்​ளார்.

கடந்த 5 ஆண்​டு​களில் 148.65 ஹெக்​டேர் பரப்பு கொண்ட 7 ரயில் திட்​டங்​களுக்கு தமிழக அரசு நிர்​வாக அனு​மதி வழங்​கி, 2 பெரிய திட்​டங்​களுக்கு 128.41 ஹெக்​டேர் பரப்​பில், 73.65 ஹெக்​டேர் நிலம் எடுப்​புப்பணி​கள் முடிக்​கப்​பட்​டுள்​ளன.

இதில், மொரப்​பூர்- தரு​மபுரி புதிய அகல ரயில் பாதை அமைக்​கும் திட்​டத்​தில் 4 கிராமங்​களில் சட்​டம்- ஒழுங்கு பிரச்​சினை காரண​மாக 24.78 ஹெக்​டேர் பரப்​பளவு நிலங்​களுக்​கு, ரயில்வே துறை திருத்​திய நிலத்​திட்ட அட்​ட​வணை சமர்ப்​பித்த நிலை​யில், நிலம் எடுப்​புப் பணி தொடங்​கப்​பட்​டுள்​ளது.

திருவனந்​த​புரம்- கன்​னி​யாகுமரி இடையே அகல ரயில் பாதை திட்​டத்தை விரைந்து முடிக்​கத் தேவை​யான ரூ.298.78 கோடி நிதியை மத்​திய ரயில்வே துறை வழங்​க​வில்​லை. தமிழகத்​தின் ரயில்வே திட்​டங்​களுக்கு ரூ.739.31 கோடி மட்​டுமே நிதி வழங்​கிய​தால், நிலம் எடுப்​ப​தில் சிரமம் உள்​ளது.

தமிழகத்​தில் 2,500 ஹெக்​டேர்: நிலம் எடுக்க தமிழக அரசு நிர்​வாக அனு​மதி தந்த நிலை​யில், 931.52 ஹெக்​டேர் நிலங்​களுக்கு ரயில்வே நிதி ஒதுக்​க​வில்​லை. தமிழகத்​தில் 19 ரயில்வே திட்​டங்​களுக்கு தேவை​யான 1,273 ஹெக்​டேர் பரப்பு நிலங்​களில், 1,198 ஹெக்​டேர் நிலமெடுப்பு பணி​கள் முடிந்து 94 சதவீதம் நிலம் ரயில்வே நிர்​வாகத்​திடம் ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளது.

இப்​படி நிலங்​கள் ஒப்​படைத்​ததை சொல்​லாமல், ஏதோ முழு​வது​மாக புறக்​கணிப்​பது​போல மத்திய அமைச்​சர் தெரி​வித்​துள்​ளார். திண்​டிவனம் - திரு​வண்​ணா​மலை ரயில் திட்​டம் நிறுத்​தப்​பட்​டுள்​ளது என ரயில்வே துறை 2020 ஜூலை 24-ம் தேதி திரு​வண்​ணா​மலை ஆட்​சி​யருக்கு கடிதம் எழு​திய நிலை​யில், அந்த திட்​டத்​துக்கு தமிழக அரசு ஒத்​துழைப்பு வழங்​க​வில்லை என ரயில்வே அமைச்​சர் கூறுகிறார்.

தூத்​துக்​குடி - மதுரை இடையே​யான திட்​டத்​தை​யும் தமிழக அரசு கைவிடக் கோரிய​தாக ஆதா​ரமின்றி ஒரு செய்​தியை கூறி​யுள்​ளார். தனுஷ்கோடி​யில் ரயில் திட்​டம் செயல்​படுத்​தி​னால் அப்​பகு​தி​யில் கடல்​வாழ் உயி​ரினங்​களின் சூழலியல் பாதிக்​கப்​படும் என்​ப​தால் அதைக் கைவிட வேண்​டும் என தமிழக முதல்​வர் கடிதம் எழு​திய நிலை​யில், அதைக் குறிப்​பி​டா​மல், அந்​தத் திட்​டத்​துக்கு தமிழக அரசு ஒத்​துழைப்பு வழங்​க​வில்லை என்று தெரி​வித்​துள்​ளார்.

இப்​படி அவர் சொல்​லும் தகவல்​கள் அனைத்​தும் உண்​மைக்கு புறம்​பாக உள்​ளன. தமிழக முதல்​வர், பிரதமருக்கு எழு​திய கடிதத்​துக்கு முறை​யான பதில் இல்​லாமல், தவறான தகவல்​களை தொடர்ந்து பரப்பி வரு​கிறார். இவ்​வாறு அமைச்​சர் எஸ்​.எஸ்​.சிவசங்​கர் கூறி​னார்​.

மத்திய அமைச்சரின் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை - அமைச்சர் சிவசங்கர்
மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை நடை திறப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in