“எந்த கைது நடவடிக்கைக்கும் நான் பயந்தவன் அல்ல” - உதயநிதி ஸ்டாலின்

“எந்த கைது நடவடிக்கைக்கும் நான் பயந்தவன் அல்ல” - உதயநிதி ஸ்டாலின்
Updated on
1 min read

தஞ்சாவூர்: எந்த கைது நடவடிக்​கைக்​கும் நான் பயந்​தவன் அல்ல என சட்​டப்​பேரவை எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

தஞ்​சாவூர் மாவட்​டம் பட்​டுக்​கோட்​டை​யில் நேற்று நடை​பெற்ற திருமண விழா ஒன்​றில் அவர் பேசி​யது: எந்த கைது நடவடிக்​கைக்​கும் நான் பயந்​தவன் அல்ல. தவெக ஆட்சி அமைந்து 105 நாட்​கள் ஆகி​உள்ள நிலை​யில், இந்த அரசால் அதி​கம் பாதிக்​கப்​பட்​டது விவ​சா​யிகள்​தான்.

விவ​சா​யிகளுக்கு வறட்சி நிவாரணம் கொடுக்க, பயிர்க் கடனை முழு​மை​யாக தள்​ளு​படி செய்ய அரசிடம் நிதி இல்லை என முதல்​வர் கூறும் நிலை​யில், எம்​எல்​ஏக்களுக்கு கார் வாங்​கிக்கொடுக்க எங்​கிருந்து வந்​தது நிதி. எனவே, திமுக எம்​எல்​ஏக்​களுக்கு கார் வேண்​டாம் என்​றும், விவ​சா​யிகளின் பிரச்​சினையைத் தீர்த்து வைக்​கு​மாறும் கூறி​விட்​டோம்.

சட்​டப்​பேர​வை​யில் ஆளுங்​கட்​சி​யினர் என்​னென்ன கூத்​தெல்​லாம் அடித்து வரு​கின்​றனர் என்​பதை மக்​கள் பார்த்து வரு​கின்​றனர். சட்​டப்​பேர​வைக்கு வரு​கிறோமா அல்​லது சூப்​பர் சிங்​கர்நிகழ்ச்​சிக்கு வரு​கிறோமா என்​பது​போல் உள்​ளது. சட்​டசபை​யில் முன்​பெல்​லாம் கேள்விகேட்​டால் பதில் கூறு​வது வழக்​கம். ஆனால், இப்​போது கேள்விகேட்​டால் பதில் கூறாமல் பாடல் பாடு​கின்​றனர்.

சட்​டப்​பேர​வை​யில் மக்​கள் பிரச்​சினை, விவ​சா​யிகள் பிரச்​சினை, சட்​டம்- ஒழுங்கு பிரச்​சினை குறித்து பேசி​னால், எந்​தக் கேள்விக்​கும் முதல்​வர் விஜய் பதில் அளிப்​பது கிடை​யாது. 3 அமைச்​சர்​கள் எழுந்து கேட்​கும் கேள்வி​களுக்கு பதில் அளிக்​காமல், பிரச்​சினையை திசை திருப்​பு​கின்​றனர். அமைச்​சர்​கள்,

ஆளுங்​கட்சி எம்​எல்​ஏக்​கள் எல்​லாம், மக்​கள் பிரச்​சினையைப் பேச வரவில்​லை. அவர்​களுக்கு நான்கு ரீல்​ஸ்​கள் இருந்​தால்​போதும். சர்க்​கார் நடத்​துகிறார்​களா அல்​லது சர்க்​கஸ் கம்​பெனி நடத்​துகிறார்​களா என கேட்​கும் அளவுக்​குத்​தான் தவெக அரசின் செயல்​பாடு​கள் உள்​ளன. தமிழகத்​தின் வளர்ச்​சியை பின்​நோக்கி தள்​ளும் டம்மி அரசாக தவெக அரசு உள்​ளது.

தமிழகத்​தில் நடக்​கும் பிரச்​சினை​கள் குறித்து முதல்​வருக்​குக்கவலை கிடை​யாது. இதை, இப்​போது​தான் மக்​கள் உணரத் தொடங்​கி​யுள்​ளனர். எனவே, இந்த ஆட்​சி​யாளர்​களின் ஆணவத்​துக்​கும், கோமாளித்​தனத்​துக்​கும் மக்​கள் விரை​வில் சரி​யான பாடத்​தைப் புகட்​டு​வர். இவ்​வாறு பேசி​னார்.

ஒருமையில் விமர்சித்த எம்எல்ஏ: இந்த திருமண விழா​வில் திரு​வை​யாறு தொகுதி திமுக எம்​எல்ஏ துரை.சந்​திரசேகரன் பேசி​ய​போது, “தஞ்​சாவூரில் ஆக.3-ம் தேதி நடை​பெற்ற ஆர்ப்பாட்​டத்​தில், உதயநிதி ஸ்டா​லின் பேசி​யதற்​காக ஒரு வழக்கு போட்​டனர். ‘சட்​டப்​பேரவைக் கூட்​டம் இருக்​கிறது, அவரை கைது செய்​தால் சட்​டம்-ஒழுங்கு பிரச்​சினை ஏற்​படும்’ எனக் கூறி​யும் போலீ​ஸார் கைதுசெய்​து, செங்​கிப்​பட்​டிக்கு அழைத்து வந்து விசா​ரித்தனர்.

டெல்டா மாவட்ட விவ​சா​யிகளுக்​காக உதயநிதி ஸ்டா​லின் அந்த கஷ்டத்தை ஏற்​றுக்​கொண்​டார். உதயநி​தியை கைது செய்​த​தில் இருந்து திமுக மிக எழுச்​சி​யாக உள்​ளது” எனத் தெரி​வித்​தார். அவரது இந்​தப் பேச்​சின்​போது, முதல்​வர் விஜய், அமைச்​சர்​கள் கீர்த்​த​னா, நிர்​மல்​கு​மார், ராஜ்மோகன் ஆகியோரை ஒரு​மை​யில் பேசி விமர்​சித்​தது சர்ச்​சையை ஏற்​படுத்​திஉள்​ளது.

“எந்த கைது நடவடிக்கைக்கும் நான் பயந்தவன் அல்ல” - உதயநிதி ஸ்டாலின்
“அந்த 3 பைல்களை முதல்வர் விஜய் ஒரு வாரத்தில் திறக்க வேண்டும்”: துரைமுருகன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in