2 மதிமுக எம்எல்ஏக்கள் பதவி விலக மறுப்பு: வைகோ உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சி

திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக பொதுக்குழுவில் தீர்மானம்
சென்னையில் நேற்று நடைபெற்ற மதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட நிர்வாகிகள். உள்படம்: செந்​தில் செல்​வன், ராஜேந்​திரன்

சென்னையில் நேற்று நடைபெற்ற மதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட நிர்வாகிகள். உள்படம்: செந்​தில் செல்​வன், ராஜேந்​திரன்

Updated on
2 min read

சென்னை: ​தி​முக கூட்​ட​ணி​யில் இருந்து வில​கு​வ​தாக, மதி​முக பொதுக்​குழுக் கூட்​டத்​தின் முடி​வில் கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் வைகோ அறி​வித்​தார். இந்​நிலை​யில், மதி​முக​வின் 2 எம்​எல்​ஏக்​களும் ராஜி​னாமா செய்ய மறுத்​துள்​ள​தால் வைகோ அதிர்ச்சி அடைந்​துள்​ளார்.

மதி​முக​வின் 32-வது பொதுக்​குழு கூட்​டம் சென்னை அண்ணா நகரில் நேற்று நடை​பெற்​றது. கட்​சி​யின் அவைத் தலை​வர் ஆடிட்​டர் ஆ.அர்​ஜுன​ராஜ் தலை​மை​யில் நடந்த கூட்​டத்​தில், பொதுச் செய​லா​ளர் வைகோ, முதன்​மைச் செய​லா​ளர் துரை வைகோ எம்​.பி., பொருளாளர் செந்​தில​திபன் முன்​னிலை வகித்​தனர். துணைப் பொதுச் செய​லா​ளர்​கள் செஞ்சி ஏ.கே.மணி, டாக்​டர் ரொஹை​யா, பூமி​நாதன், ஜீவன், டாக்​டர் சி.கிருஷ்ணன் மற்​றும் மாவட்​டச் செய​லா​ளர்​கள் உள்​ளிட்ட பொதுக்​குழு உறுப்​பினர்​கள் கலந்​து​கொண்​ட நிலை​யில், 2 எம்​எல்​ஏக்​கள் செந்​தில் செல்​வன், தி.​மு.​ராஜேந்​திரன் மட்​டும் கூட்​டத்​துக்கு வரவில்​லை.

பொதுக்​குழு​வில் திமுக தலை​மையி​லான மதச்​சார்​பற்ற முற்​போக்​குக் கூட்​ட​ணி​யில் இருந்து மதி​முக வில​கு​வ​தாக அதி​காரப்​பூர்​வ​மாக அறிவித்து, அதற்​கான தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. தமிழகத்​தில் முதல்​வர் விஜய் தலை​மையி​லான அரசுக்கு வாழ்த்​து, மேகே​தாட்டு அணைப் பிரச்​சினை​யில் புதிய நடு​வர் மன்​றம் அமைக்க வேண்​டும் என்ற கோரிக்​கையை அரசு திரும்​பப் பெற வேண்​டும் என்​பது உள்​ளிட்ட 23 தீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​பட்​டன.

​பின்னர், செய்​தி​யாளர்​களிடம் வைகோ கூறிய​தாவது: திமுக கூட்​ட​ணி​யில் இருந்து மதிமுக உடனடி​யாக வெளி​யேற வேண்​டும் என்ற கருத்தை பொதுக்​குழு உறுப்​பினர்​கள் அனை​வரும் ஒரு​மன​தாக வலி​யுறுத்​தினர். அவர்​களது விருப்​பத்​துக்கு இணங்க, கூட்​ட​ணி​யில் இருந்து வில​கும் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது.

தமிழகத்​தில் பாஜக​வின் ஆதிக்​கம் ஊடுரு​வக் கூடாது என்ற ஒரே காரணத்​துக்​காகவே, கடந்த 9 ஆண்​டு​களாக திமுக கூட்​ட​ணி​யில் உறு​தி​யாக நீடித்​தோம்.

தேர்​தல் முடிவு​களுக்​குப் பிறகு, அதி​முக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு அளிக்க முயன்​ற​தாக பரவலாக செய்​தி​கள் வெளிவந்​தன. பரஸ்​பரம் எதிர் துரு​வங்​களாக இருந்த இரு கட்​சிகளும் இப்​படி ஒரு ரகசிய உடன்​படிக்​கையை மேற்​கொண்​டது உண்​மை​யாக இருக்​கு​மா​னால், அதை​விட பெரிய அரசி​யல் மோசடி வேறு இருக்க முடி​யாது. இந்த தகவலை அறிந்த உடனேயே திமுக உடனான உறவை முறித்​துக் கொள்ள முடிவு செய்​தோம்.

மதி​முக சார்​பில் உதயசூரியன் சின்​னத்​தில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்​றவர்​களில், சீர்​காழி எம்​எல்ஏ செந்தில் செல்​வன் ஏற்​கெனவே திமுக​வில் இணைந்​து​விட்​டார். கடையநல்​லூர் எம்​எல்ஏ ராஜேந்​திரன் பொதுக்​குழு​வில் பங்கேற்காவிட்டாலும், மதி​முக​விலேயே தொடர்​வ​தாக உறுதி அளித்​துள்​ளார்.

மதி​முக​வில் இருந்து வெளி​யேறிய முன்​னாள் துணைப் பொதுச் செய​லா​ளர், என் மீதும், என் மகன் துரை வைகோ மீதும் அபாண்​ட​மான குற்​றச்​சாட்​டு​களை சுமத்தி வரு​கிறார். முதல்​வர் விஜய்​யிடம் நான் ரூ.50 கோடி வாங்​கிய​தாக​வும், சென்னை ஓஎம்​ஆர், அண்ணா சாலை​யில் பிரம்​மாண்ட கட்​டிடங்​களை வாங்​கி​யுள்​ள​தாக​வும் கூறப்​படும் புகார்​கள் முற்​றி​லும் பொய்​யானவை.

இந்த பழிச்​சொற்​களுக்​குப் பின்​னால் இருந்து யாரோ ஒரு சிலர் அவரை இயக்​கு​கின்​றனர். எனவே, இதுதொடர்​பான செய்​தியை வெளி​யிட்ட நாளிதழ் மற்​றும் புகார் கூறிய நபர் மீது மானநஷ்ட வழக்கு தொடர உள்​ளேன். திமுக கூட்​ட​ணி​யில் இருந்து வெளி​யேறி​யுள்ள நாங்​கள், முதல்​வர் விஜய் தலை​மையி​லான ஆட்​சிக்கு ஆதரவு அளிக்​கிறோம். வரவிருக்​கும் இடைத்​தேர்​தலில் தவெகவை ஆதரிப்​போம்.

உள்​ளாட்​சித் தேர்​தலிலும் தவெக​வுடன் இணைந்து செயல்பட வாய்ப்பு உள்​ளது. தவெக ஆட்​சி​யில் ஊழல் ஒழிக்​கப்​பட்​டுள்​ளது. சமூக நீதி மற்​றும் இரு​மொழிக் கொள்​கை​யில் அவர்​கள் உறு​தி​யாக உள்​ளனர். அண்​ணா​வின் கொள்​கைகளைப் பின்​பற்றி வரு​வ​தால், தவெக அரசின் செயல்​பாடு​கள் எங்​களுக்கு திருப்தி அளிக்​கின்​றன.

எங்​கள் கட்சி எம்​எல்​ஏவை திமுக தன் பக்​கம் இழுத்​திருப்​பது ஆரோக்​கிய​மான அரசி​யல் அல்ல. இதை ‘குதிரை பேரம்’ என்று சொல்​வ​தா, ‘ஒட்டக பேரம்’ என்று சொல்​வதா எனத் தெரிய​வில்​லை. மேலும், எங்​களது 2 எம்​எல்​ஏக்​களும் ராஜி​னாமா செய்​தால், அவர்​களுக்கு ஆதர​வாக இடைத்​தேர்​தலில் பிரச்​சா​ரம் செய்​வேன் என விஜய் கூறி​யிருந்​தார். ஆனால், எதிர்​வரும் இடைத்​தேர்​தலில் மதி​முக போட்​டி​யிடாது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

இதற்​கிடையே, திமுக கூட்​ட​ணியில் உதயசூரியன் சின்​னத்​தில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்ற மதி​முக​வின் 2 எம்​எல்​ஏக்​களும் தங்​கள் பதவியை ராஜி​னாமா செய்ய மறுப்பு தெரி​வித்​துள்​ளனர். இதனால், வைகோ மற்றும் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்​துள்​ளனர்.

கடையநல்​லூர் எம்​எல்ஏ ராஜேந்​திரன் தனது சமூக வலை​தளப் பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: தொகுதி மக்​கள் நாள்​தோறும் என்​னிடம் வெளிப்​படுத்தி வரும் உணர்வை மதித்​தும், தலை​வர் வைகோ மீதோ, எம்​எல்​ஏ​வான என் மீதோ களங்​கம் படர்​வதைத் தவிர்க்​கும் பொருட்​டும் பதவி வில​கல் என்ற முடிவை தலைமை இப்​போது மேற்​கொள்ள வேண்​டாம். குறைந்​த​பட்​சம் 6 மாதம் பொறுத்​திருப்​போம். கூட்​டணி குறித்து தாங்​களும், கட்​சி​யும் எடுக்​கும் முடிவை மதிக்​கிறேன். எனவே, பதவி வில​கல் தொடர்​பாக வைகோ​விடம் இருந்து கிடைக்​கப்​பெற்ற உத்​தர​வை, என்​னால் செயல்​படுத்த இயலாது. அதனால், பொதுக்​குழு​வில் கலந்து கொள்​ள​வில்​லை. இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

<div class="paragraphs"><p>சென்னையில் நேற்று நடைபெற்ற மதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட நிர்வாகிகள். உள்படம்:&nbsp;செந்​தில் செல்​வன்,&nbsp;ராஜேந்​திரன்</p></div>
கராச்சியில் வெடிகுண்டு தாக்குதல்: 8 பேர் உயிரிழப்பு - பாகிஸ்தானில் பதற்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in