பின்னலாடை தொழிலாளர்கள், நெசவாளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துமா தவெக வாக்குறுதிகள்?

பின்னலாடை தொழிலாளர்கள், நெசவாளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துமா தவெக வாக்குறுதிகள்?
Updated on
2 min read

திருப்பூர்: திருப்பூரை அடுத்த பெருமாநல்லூரில் தவெக தலைவர் விஜய் கடந்த 2 நாள்களுக்கு முன்பாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது விசைத்தறி நெசவாளர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.

திருப்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்லடம், தெக்கலூர், அவிநாசி உள்ளிட்ட பகுதிகளில் விசைத்தறிக் கூடங்கள் அதிக அளவில் உள்ளன. அதேபோல, திருப்பூரில் உள்ள பின்னலாடை உற்பத்தி சார்ந்த நிறுவனங்களில் சுமார் 90 சதவீதம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் பல லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

பார்க்க திரண்ட கூட்டம்: தவெக தலைவர் விஜய் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவிநாசி அருகே உள்ள ஆட்டையாம் பாளையத்தில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரை, சாலை வலம் மேற்கொண்டபோது ஆயிரக்கணக்கானோர் சாலையின் இரு புறங்களிலும் நின்று உற்சாகமாக வரவேற்றனர்.

மேலும், பிரச்சாரக் கூட்டம் நடைபெற்ற பெருமாநல்லூர் நால் ரோட்டில் கூட்டம் நடைபெறுவதற்கு 5 மணி நேரத்துக்கு முன்னதாக இளைஞர்கள் மட்டுமின்றி, கல்லூரி மாணவிகள், வேலைக்குச் செல்லும் பெண்கள், ஆண்கள், முதியவர்கள் என அனைத்து வயதினரும் காத்திருந்தனர்.

இதன் காரணமாக கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றதுடன், பிரச்சாரக் கூட்டம் முடிந்தும் பெருமாநல்லூரில் இருந்து திருப்பூர் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் சுமார் ஒன்றரை மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விஜய்க்கு திரளும் கூட்டத்தால் தவெக கட்சியினர் உற்சாக மடைந்தாலும், மற்றொருபுறம் கூட்டம் நடிகரைப் பார்க்க வருவதாகவும், இது தேர்தலில் வாக்காக மாறாது என்றும் விமர்சனங்கள் உள்ளன.

விஜய் நெசவாளர்கள், பின்ன லாடைத் தொழிலாளர்களைக் குறிவைத்து அதிக அளவிலான வாக்குறுதிகளை அளித்துள்ளது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. நெசவாளர்களின் தயாரிப்புகளை நேரடியாக சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யும் வகையில் அரசுக்குச் சொந்தமான உலகளாவிய இ-காமர்ஸ் பிராண்ட் உருவாக்கப்படும்.

முக்கிய நகரங்களில் கைத்தறி விற்பனை நிலையங்கள், ஷோரூம்கள் அமைக்கப்படும். நிலையற்ற நூல் விலை, மின்சார நெருக்கடியைப் பகிர்ந்துகொள்ள கைத்தறி, விசைத்தறி வைத்திருக்கும் ஒவ்வொரு நெசவாளர் குடும்பத்துக்கும் வங்கிகளின் மூலமாக ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் செலுத்தப்படும். கைத்தறிகளுக்கான இலவச மின்சாரம் 500 யூனிட், விசைத்தறிகளுக்கான இலவச மின்சாரம் 1,500 யூனிட்டுகளாக உயர்த்தப்படும்.

நெசவாளர்களுக்கு உற்பத்தி செலவைக் குறைக்க அவர்கள் வாங்கும் ரசாயனம், சாயங்களுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். அனைத்து நெசவாளர்களுக்கும் ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு வழங்கப்படும். நெசவாளர்களின் முதியோர் ஓய்வூதியம் மாதம் ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்படும். தமிழகத்தில் நெருக்கடியில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.15 ஆயிரம் கோடி ‘சேப் கிரெடிட் கியாரண்டி பண்ட்’ உருவாக்கப்படும்.

ஜவுளித் துறையில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான பீக்ஹவர்ஸ் மின் கட்டணம் நிறுத்திவைக்கப்படும். விரிவான ஆய்வுக்குப் பிறகு மின் கட்டணம் முறைப்படுத்தப்படும். இந்த நிறுவனங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு 100 சதவீத மின்சார வரி விலக்கு அளிக்கப்படும். சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை மேம்படுத்த, உலக அளவில் போட்டியிடும் வகையில் 35 சதவீத நேரடி மூலதன மானியம் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

விவசாயிகளுக்கான அறிவிப்புகள்: 5 ஏக்கருக்கு குறைவான நிலம் உள்ள விவசாயிகளின் கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி, அதற்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 50 சதவீத பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்படும். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்கப்படும். நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,500 வழங்கப்படும்.

ஜவுளித் துறையில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான பீக்ஹவர்ஸ் மின் கட்டணம் நிறுத்திவைக்கப்படும். விரிவான ஆய்வுக்குப் பிறகு மின் கட்டணம் முறைப்படுத்தப்படும். இந்த நிறுவனங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு 100 சதவீத மின்சார வரி விலக்கு அளிக்கப்படும். சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை மேம்படுத்த, உலக அளவில் போட்டியிடும் வகையில் 35 சதவீத நேரடி மூலதன மானியம் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

விவசாயிகளுக்கான அறிவிப்புகள்: 5 ஏக்கருக்கு குறைவான நிலம் உள்ள விவசாயிகளின் கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி, அதற்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 50 சதவீத பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்படும். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்கப்படும். நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,500 வழங்கப்படும்.

பின்னலாடை தொழிலாளர்கள், நெசவாளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துமா தவெக வாக்குறுதிகள்?
கோவை வடக்கு தொகுதியில் வாகை சூடப்போவது யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in