நயினார் நாகேந்திரனை கைது செய்திருந்தால் தவெக ஆட்சி முடிவுக்கு வந்திருக்கும்: துரைமுருகன் கருத்து

துரைமுருகன் | கோப்புப்படம்

துரைமுருகன் | கோப்புப்படம்

Updated on
1 min read

காட்பாடி: எ​திர்க் கட்​சித் தலை​வர் உதயநி​தியை கைது செய்​வ​தில் காட்​டிய வேகத்தை பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கைதில் காட்ட முடி​யாது, அப்​படிச் செய்​தால் ஒரே நாளில் தவெக ஆட்​சியை மத்​திய அரசு முடிவுக்​குக் கொண்டு வந்து விடும் என திமுக பொதுச்​செய​லா​ளர் துரை​முரு​கன் கருத்து தெரி​வித்​தார்.

வேலூரில் செய்​தி​யாளர்​களை சந்​தித்​த​போது அவர் தெரி​வித்​த​தாவது: கர்​நாட​கா​வில் இருந்து திறக்​கப்​படும் நீரின் அளவு தமிழகத்​துக்கு வரும்​போது குறை​கிறது. கர்​நாடகா பகு​தி​யில் நீர் திருட்டு நடை​பெறலாம். இதை கர்​நாடகா அரசு கண்​காணிக்க வேண்​டும்.

தவெக அரசு 100 நாளை நிறைவு செய்​திருக்​கிறது. இந்த 100 நாளில் இதைச் சாதித்​தோம் என ஏதாவது ஒன்​றைச் சொல்​லச் சொல்​லுங்​கள் பார்ப்​போம். பேசிக் கொண்​டிருக்​கிறார்​களே தவிர எந்த காரி​யத்​தி​லும் தவெக இறங்​க​வில்​லை. தேர்​தல் வாக்​குறுதி பக்​கமே செல்​ல​வில்​லை.

மேகே​தாட்​டு​வில் அணைக் கட்​டி​னால் தமிழகத்​துக்கு ஒரு சொட்டு தண்​ணீர் கூட வராது. அங்கு அணைக் கட்டி விட்​டால் டெல்டா பகு​தி​கள் மிக​வும் வறண்டு போய்​விடும். அதில் எந்த சந்​தேக​மும் இல்​லை.

பாஜக மாநிலத்​தவர் நயி​னார் நாகேந்​திரன் முதல்​வரின் தாய் குறித்து அவதூறாகப் பேசி​ய​தாக வரும் செய்தி குறித்து நான் முழு​மை​யாகப் படிக்​க​வில்​லை. உதயநி​தியை கைது செய்​வ​தில் காட்​டிய வேகத்தை நயி​னார் நாகேந்​திரன் கைதில் காட்ட முடி​யாது. அப்​படி நயி​னார் நாகேந்​திரன் மீது கை வைத்​தால் தவெக ஆட்​சியை ஒரே நாளில் மத்​திய அரசு முடிவுக்​குக்​ கொண்​டு வந்​து விடும்​. இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.

<div class="paragraphs"><p>துரைமுருகன் | கோப்புப்படம்</p></div>
கர்நாடகாவில் 3 தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரம்: முதல்வர் விஜய் கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in