கோப்புப் படம்

கோப்புப் படம்

இறந்து கரை ஒதுங்கிய ஆமைகள்: ராமேசுவரம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை

Published on

ராமேசுவரம்: அரிய வகை கடல் ஆமை​கள் ராமேசுவரம் கடலோரப் பகு​தி​களில் இறந்த நிலை​யில் அடிக்​கடி கரை ஒதுங்​கு​வது அதி​கரித்து வரு​கிறது. நேற்று ஒரே நாளில் 3 கடல் ஆமை​கள் இறந்து கரை ஒதுங்​கின.

வங்​காள விரி​கு​டா, பாக் நீரிணை, மன்​னார் வளை​குடா மற்​றும் குமரிக் கடல் பகு​தி​களில் ஆலிவ் ரிட்​லி, பச்சை ஆமை, ஹாக்​ஸ்​பில் ஆமை, லாக்​கர்​ஹெட் ஆமை, லெதர்​பேக் ஆமை ஆகிய 5 வகை​யான கடல் ஆமை​கள் காணப்​படு​கின்​றன. பெண் ஆமை​கள் எந்த கடற்​கரை​யில் பிறந்​தனவோ, அதே கடற்​கரைக்கே சென்று வளர்ந்து கருத்​தரித்த பிறகு மீண்​டும் முட்​டை​யிடக்கூடிய வழக்​கத்​தைக் கொண்​டுள்​ளன.

தமிழகத்​தில் அதிக அளவில் ஆமை​கள் முட்​டை​யிடு​வதற்​காக கரைக்கு வரும் பகு​தி​களில் ராமேசுவரம் கடற்​பகுதி முதன்​மை​யானது. அண்​மைக்​கால​மாக ராமேசுவரம் கடலோரப் பகு​தி​களில் 10-க்​கும் மேற்​பட்ட கடல் ஆமை​கள் இறந்து அடிக்​கடி கரை ஒதுங்​கு​வது நிகழ்​கின்​றன. இந்​நிலை​யில், ராமேசுவரம் அருகே சங்​கு​மால் கடற்​பகு​தி​யில் நேற்று ஒரே நாளில் 3 ஆலிவ் ரிட்லி எனும் சிற்​றாமை​கள் இறந்த நிலை​யில் கரை ஒதுங்​கின.

கடல் சுற்​றுச்​சூழல்: சமன்​பாட்​டில் கடல் ஆமை​களின் பங்கு மிக​வும் முக்​கிய​மானது. மேலும், மீன் குஞ்​சுகளை உணவாக உட்​கொண்டு மீன்​வளத்தைஅழிக்​கும் ஜெல்லி மீன்​களை கடல் ஆமை​கள் உணவாக உட்​கொள்​கின்​றன. இதன் மூலம் மீன்​வளம் பாதுகாக்​கப்​படு​கிறது.

பரு​வநிலை மாற்​றம், கடல் மாசு​பாடு, தடை செய்​யப்​பட்ட மீன்​பிடி முறை, கடலில் பிளாஸ்​டிக் பொருட்​கள் கலப்​பது, படகு​களில் மோதி காயமடைதல் ஆகிய​வற்​றால் ஆமை​கள் பாதிக்​கப்​படு​கின்​றன.

ராமேசுவரம் கடலோரப் பகு​தி​களில் உள்ள ஆமை​களைப் பாது​காப்​பது குறித்து வனத் துறை​யினர் ஆய்வு மேற்​கொண்டு, உரிய நடவடிக்​கைகளை மேற்​கொள்ள வேண்​டும் என்று சுற்​றுச்​சூழல் ஆர்​வலர்​கள் வலி​யுறுத்தி உள்​ளனர்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
அடகு கடையில் நள்ளிரவில் திருட்டு முயற்சியை தடுத்த உரிமையாளர்: பிஹாரைச் சேர்ந்த இளைஞர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in