தமிழகத்தில் பெண் பணியாளர்களுக்கு மாதவிடாய் கால விடுப்புக்கான விதிகளை உருவாக்க சிறப்பு குழு

உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
தமிழகத்தில் பெண் பணியாளர்களுக்கு மாதவிடாய் கால விடுப்புக்கான விதிகளை உருவாக்க சிறப்பு குழு
Updated on
1 min read

மதுரை: தமிழகத்​தில் பெண் பணி​யாளர்​களுக்கு மாத​வி​டாய் காலங்​களில் சம்​பளத்​துடன் விடுப்பு வழங்​கு​வதற்​கான விதி​களை உரு​வாக்க சிறப்​புக் குழு அமைக்​கும் பணி நடை​பெற்று வரு​வ​தாக உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் அரசு தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

மதுரை கோம​திபுரத்​தைச் சேர்ந்த நர்​ம​தா, உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனுவில், தமிழகத்​தில் பெண் பணி​யாளர்​கள் மாதவி​டாய் காலங்​களில் சிரமத்தை சந்திக்கின்றனர். அவர்களுக்கு ஊதி​யத்துடன் விடுப்பு வழங்​கும் கொள்கை தமிழகத்தில் இல்லை. எனவே,அது குறித்த சாத்​தியக் கூறுகளை ஆய்வு செய்யவும் ஊதி​யத்​துடன்கூடிய விடுப்புவழங்​குவது குறித்தும் அரசு கொள்கை முடிவு எடுக்​க​ உத்தர​விடக் கோரி இருந்தார்.

இம்​மனு நீதிப​தி​கள் கார்த்​தி​கேயன், சக்​திவேல் அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அரசுத் தரப்​பில், பெண் பணி​யாளர்​களுக்கு மாத​வி​டாய் விடுப்பு வழங்​கு​வது தொடர்​பான விதி​களை உரு​வாக்க சிறப்​புக் குழு அமைக்​கப்​பட்டு வரு​கிறது. அது தொடர்​பாக அறிக்கை தாக்​கல் செய்ய 2 வாரங்​கள் அவகாசம் தேவை. இதில் தனி​யார் ஊழியர்​களை​யும் சேர்க்​கும் வகை​யில் விதி​கள் உரு​வாக்​கப்​பட்டு வரு​கின்​றன எனத் தெரிவிக்​கப்​பட்​டது.

பின்​னர் நீதிப​தி​கள், மாத​வி​டாய் கால விடுப்பு விதி​களை உரு​வாக்க அமைக்​கப்பட உள்ள குழு​வின் உறுப்​பினர்​கள் விபரங்​களை நீதி​மன்​றத்​தில் தெரிவிக்க வேண்​டும். விசா​ரணை 2 வாரங்​களுக்கு தள்ளிவைக்​கப்​படு​கிறது என உத்​தர​விட்​டனர்.

தமிழகத்தில் பெண் பணியாளர்களுக்கு மாதவிடாய் கால விடுப்புக்கான விதிகளை உருவாக்க சிறப்பு குழு
மேகேதாட்டு விவகாரத்தில் மத்திய இணை அமைச்சரின் பதிலை திரும்பப் பெறுக: பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in