

ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி லவ்டேல் பகுதியில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் லாரன்ஸ் பள்ளியின் 168-வது நிறுவனர் நாள் விழா 3 நாட்கள் நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சி நாளை (ஏப்.30) நடக்கிறது. இதில், தமிழக ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்துவரும் கேரள ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர் பங்கேற்கிறார்.
இதற்காக, இன்று கேரளாவில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார்.
இரவு அங்கேயே தங்கும் ஆளுநர், நாளை காலை கோத்தகிரி வழியாக சாலை மார்க்கமாக ஊட்டி செல்கிறார்.