புயலை எதிர்கொள்ளும் வகையில் தயார் நிலையில் தமிழக அரசு: முதல்வர் ஸ்டாலின் தகவல்

புயலை எதிர்கொள்ளும் வகையில் தயார் நிலையில் தமிழக அரசு: முதல்வர் ஸ்டாலின் தகவல்
Updated on
1 min read

சென்னை: சென்னை சேப்​பாக்​கம் எழில​கம் வளாகத்​தில் உள்ள அவசர​கால கட்​டுப்​பாட்டு மையத்​தில் முதல்​வர் ஸ்டாலின் காணொலி வாயி​லாக 14 மாவட்ட ஆட்​சி​யர்​களு​டன் ‘டிட்​வா’ புயல் முன்னெச்​சரிக்கை நடவடிக்​கைகள் குறித்து நேற்று ஆய்வு செய்தார்.

அப்​போது அவர், ‘‘அனைத்து துறையினரும் முறை​யான ஒருங்​கிணைப்​புடன் செயல்பட வேண்​டும். அனைத்து துறை அலு​வலர்​களும் தயார் நிலை​யில் இருக்க வேண்​டும். முகாம்களில் பால் உள்​ளிட்ட அத்​தி​யா​வசிய உணவுப் பொருட்​கள் தயாராக இருக்க வேண்​டும். குடி​யிருப்பு பகு​தி​யில் வெள்​ளநீரை அகற்ற தேவை​யான நடவடிக்​கையை எடுக்க வேண்​டும். புயல் காற்​றால் மின்​கம்​பங்​கள் பாதிக்​கப்​பட்​டால், அதை சரிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்​டும்’’ என்று உத்​தர​விட்​டார்.

ஆய்​வின்​போது தலை​மைச் செயலர் முரு​கானந்​தம், வரு​வாய் நிர்​வாக ஆணை​யர் ​சாய்​கு​மார், எரிசக்தி துறை செயலர் மங்​கத் ராம் சர்​மா, வருவாய்த் துறை செயலர் அமு​தா, நில நிர்வாக ஆணை​யர் பழனி​சாமி, பேரிடர் மேலாண்மை ஆணை​யர் சிஜி தாமஸ் வைத்​யன், இயக்​குநர் முத்​துக்​குமரன் உள்​ளிட்​டோர் உடன் இருந்​தனர்.

பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் பேசிய முதல்​வர், ‘‘அனைத்து மாவட்டங்​களுக்​கும் கண்​காணிப்பு அலு​வலர்கள் அனுப்​பப்​பட்​டுள்​ளனர். சென்​னையிலும் அதிக மழை பெய்யும் என்று கூறி​யுள்​ளனர். தேவையான இடங்களில் முகாம்​களும், அங்கு உணவு வழங்​கு​வதற்​கான ஏற்​பாடு​களும் செய்​யப்​பட்​டுள்​ளன. தண்​ணீர் திறந்​துவிடும் நேரங்​களில் தாழ்​வான பகு​தி​களில் உள்ள மக்​களை உடனடியாக அப்​புறப்​படுத்​த​வும் ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. புயலை எதிர்​கொள்ள அனைத்து வகை​யிலும் அரசு தயா​ராக உள்​ளது’’ என்று தெரிவித்தார்.

புயலை எதிர்கொள்ளும் வகையில் தயார் நிலையில் தமிழக அரசு: முதல்வர் ஸ்டாலின் தகவல்
கோவாவில் 77 அடி உயர ராமர் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in