100 நாள் வேலை திட்டத்தின் பெயர் மாற்றம்: மத்திய பாஜக அரசை கண்டித்து தமிழக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டதைக் கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாநில தலைவர் கு.செல்வப்பெருந்தகை தலைமையில் சென்னை அண்ணா சாலை, தலைமை தபால் அலுவலகம் முன்பாக நேற்று நடைபெற்றது. இதில் இண்டியா கூட்டணிக் கட்சியினரும் கலந்து கொண்டனர். | படம்: ம.பிரபு |

100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டதைக் கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாநில தலைவர் கு.செல்வப்பெருந்தகை தலைமையில் சென்னை அண்ணா சாலை, தலைமை தபால் அலுவலகம் முன்பாக நேற்று நடைபெற்றது. இதில் இண்டியா கூட்டணிக் கட்சியினரும் கலந்து கொண்டனர். | படம்: ம.பிரபு |

Updated on
1 min read

சென்னை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரில் மகாத்மா காந்தி பெயரை நீக்கிய மத்திய பாஜக அரசைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையில் இண்டியா கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகம் அருகில் நேற்று நடைபெற்றது.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பட்டத்தில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது:

மாநிலங்களுக்கு நிதிச்சுமை: இந்தியாவில் மனிதர்கள் உள்ளவரை மகாத்மா காந்தி பெயரை அழிக்க முடியாது. காந்தியை படு கொலை செய்த பிறகும் இன்னும் அவர்களது வெறி அடங்கவில்லை. இந்தியாவில் எத்தனையோ மக்கள் இந்த திட்டத்தில் பயன் பெற்றனர்.

புரட்சிகரமான இந்தத் திட்டத்தை மோடி, அமித் ஷா மற்றும் ஆர்எஸ்எஸ்.காரர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பாஜக ஆளாத மாநிலங்களில் நிதிச் சுமையை ஏற்படுத்த வேண்டும்.

பாஜக ஆளும் மாநிலங்களில் கூடுதலாக நிதி கொடுக்க வேண்டும் என பாஜக ஆட்சி நடத்தி வருகிறது. எனவே, முதல்வர் தலைமையில் அனைத்து கிராமங்களிலும், மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்ட பயனாளிகளுடன் அணி திரண்டு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசும்போது, ‘‘சட்ட விரோதமாகவும், சமூக நீதிக்கு எதிராகவும் செயல்படும் ஓர் ஆட்சியாக ஆர்எஸ்எஸ் வழிநடத்தும் பாஜக ஆட்சி உள்ளது.

இது திட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே சிதைக்கும் செயலாகும்’’என்றார். திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசும்போது, ‘‘இந்த சட்டத்தை பிரதமர் திரும்பப்பெறும் வரை இண்டியா கூட்டணியின் போராட்டம் ஓயாது’’ என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணசாமி, கே.வீ.தங்கபாலு, மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

<div class="paragraphs"><p>100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டதைக் கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாநில தலைவர் கு.செல்வப்பெருந்தகை தலைமையில் சென்னை அண்ணா சாலை, தலைமை தபால் அலுவலகம் முன்பாக நேற்று நடைபெற்றது. இதில் இண்டியா கூட்டணிக் கட்சியினரும் கலந்து கொண்டனர். | படம்: ம.பிரபு |</p></div>
வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு: இணையதளத்தில் வாக்காளர்கள் சரிபார்த்துக் கொள்ளவும் ஏற்பாடு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in