

காரைக்கால்: தமிழக முதல்வர், திமுக, அதிமுக தலைவர்கள் என அனைவரும் வந்து பெங்களூருவில் நிலவும் குடிநீர் பிரச்சினையை நேரில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகவுடா தெரிவித்துள்ளார்.
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் நேற்று தரிசனம் செய்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழகத்தில் திமுகவும், அதிமுகவும் அரசியல் ரீதியாக எதிரெதிராக இருந்தாலும், காவிரிநீர் பிரச்சினை எழும்போதெல்லாம், இந்த விவகாரத்தில் ஒன்றுபட்டு உறுதியான நிலைப்பாட்டை எடுக்கின்றன. நாங்கள் எங்களது மாநிலத்தில் பாசனத்துக்காக தண்ணீர் கேட்கவில்லை. குடிநீருக்காகத்தான் கேட்கிறோம்.
எனவே, தமிழக முதல்வர் விஜய், திமுக, அதிமுக தலைவர்கள் என அனைவரும் பெங்களூரு, சிக்மகளூர், கோலார் பகுதிகளுக்கு வந்து அங்கு நிலவும் குடிநீர் பிரச்சினையை நேரில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.