16-வது சட்டப்பேரவையின் நிறைவுக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவிப்பு
16-வது சட்டப்பேரவையின் நிறைவுக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தின் 16-வது சட்​டப்​பேர​வை​யின் 8-வது கூட்​டத்​தொடரின் நிறைவுக் கூட்​டம் நேற்று நடை​பெற்ற நிலை​யில், மீண்​டும் அவை கூடும் தேதி குறிப்​பிடப்​ப​டா​மல் ஒத்​திவைக்​கப்​படு​வ​தாக பேர​வைத் தலை​வர் மு.அப்​பாவு அறி​வித்​தார்.

தமிழகத்​தின் 16-வது சட்​டப்​பேரவை கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் அமைந்​தது. இந்த சட்​டப்​பேர​வை​யின் 8-வது கூட்​டத் தொடர் கடந்த ஜன.20-ம் தேதி ஆளுநர் உரை​யுடன் தொடங்​கியது. ஆளுநர் உரை மீதான விவாதம் 24-ம் தேதி வரை நடை​பெற்​றது. இறுதி நாள் முதல்​வர் ஸ்டா​லின் பதி​லுரை​யுடன், பேரவை தேதி குறிப்​பி​டா​மல் ஒத்​திவைக்​கப்​பட்​டது.

தொடர்ந்​து, பேர​வை​யில் இடைக்​கால பட்​ஜெட், பிப்​.17-ம் தேதி தாக்​கல் செய்​யப்​படும் என பேர​வைத் தலை​வர் அப்​பாவு அறி​வித்​தார். அதன்​படி, 17-ம் தேதி பொது நிதி பட்​ஜெட்டை அமைச்​சர் தங்​கம் தென்​னரசு​வும் அதைத் தொடர்ந்து வேளாண் பட்​ஜெட்டை அமைச்​சர் எம்​.ஆர்​.கே. பன்​னீர்​செல்​வ​மும் தாக்​கல் செய்​தனர். அதன்​பின் அன்று நடை​பெற்ற அலு​வல் ஆய்​வுக்​குழு கூட்​டத்​தில் பேர​வைக்​கூட்​டத்தை 20-ம் தேதிவரை நடத்த முடி​வெடுக்​கப்​பட்​டது.

அதன்​படி, பிப்​.18- ம் தேதி இரு பட்​ஜெட்​கள் மீதான விவாதம் தொடங்​கியது. அன்​று, முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், மத்​திய மாநில அரசுகள் இடையி​லான உறவு தொடர்​பாக அமைக்​கப்​பட்ட உயர்​நிலைக் குழு​வின் அறிக்​கை​யின் முதல் பாகத்தை பேர​வை​யில் தாக்​கல் செய்து அதுதொடர்​பாக பேசி​னார். தொடர்ந்​து, நேற்று முன்​தினம் எதிர்க்​கட்​சித் தலை​வர் பழனி​சாமி பேர​வை​யில் உரை​யாற்​றி​னார். இறு​தி ​நாளான நேற்று பேர​வை​யில் கடந்த 2025-26-ம் நிதி​யாண்​டுக்கான இறுதி துணை பட்​ஜெட்டை அமைச்​சர் தங்​கம் தென்​னரசு தாக்​கல் செய்​தார். அதன்​பின், இரு பட்​ஜெட்​கள் மீதான உரைக்கு அமைச்சர்கள் பதி​ல் அளித்தனர்.

அதன்​பின், நிதி ஒதுக்​கம் தொடர்​பான சட்ட முன்​வடிவு​கள் நிறைவேற்​றப்​பட்​டன. இதுத​விர, கடந்த 2023 மற்​றும் 2025-ம் ஆண்​டு​களில் தனி​யார் பல்​கலைக்​கழகங்​கள் குறித்து நிறைவேற்​றப்​பட்ட சட்ட மசோ​தாக்​கள் திரும்​பப் பெறப்​பட்​டன. ஓபிஎஸ் ஆதரவு எம்​எல்ஏ சட்​டப்​பேர​வை​யின் கடைசிக்​கூட்​டம் என்​ப​தால், முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அனை​வருக்​கும் நன்றி தெரி​வித்​தார். அதி​முக மற்​றும் பாமக​வில் அன்​புமணி ஆதரவு உறுப்​பினர்​கள் வராத நிலை​யில், திமுக கூட்​டணி கட்​சிகளின் தலை​வர்​கள், ஓபிஎஸ் ஆதரவு எம்​எல்ஏ அய்​யப்​பன் ஆகியோர் முதல்​வருக்கு வாழ்த்து தெரி​வித்து பேசினர். தொடர்ந்​து, பேர​வைத் தலை​வரும் வாழ்த்தும மற்​றும் நன்றி தெரி​வித்து பேசி​னார்.

நிறை​வாக, பேரவை மீண்​டும் கூடும் தேதி குறிப்​பி​டா​மல் ஒத்திவைப்​ப​தற்​கான தீர்​மானத்தை அமைச்​சர் கே.என்​.நேரு கொண்டு வந்​தார். இதையடுத்​து, பேரவை மீண்​டும் கூடும் தேதி குறிப்​பிடப்​ப​டாமல் ஒத்திவைக்​கப்​படு​வதாக பேர​வைத் தலை​வர் மு.அப்​பாவு அறிவித்​தார்​.

16-வது சட்டப்பேரவையின் நிறைவுக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
‘முதல்வர் ஸ்டாலின் இமேஜை கெடுக்க சூழ்ச்சி!’ - கே.என்.நேரு விவகாரத்தில் திமுக ரியாக்‌ஷன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in